இந்திய அணியில் இவர் இல்லையென்றால் வேற யார் விளையாடுவார்கள். மீண்டும் அணியில் இடம்பிடிப்பார் – பாண்டிங் பேட்டி

Ponting
- Advertisement -

இந்திய அணியில் தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பராக இளம் வீரரான ரிஷப் பண்டிற்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வாய்ப்பினை ஆரம்ப கட்டத்தில் சரியாக பயன்படுத்திக் கொண்ட பண்ட் தற்போது நடைபெற்ற பல தொடர்களாக தனது வாய்ப்பினை தவற விட்டு வருகிறார் என்பது நாம் அறிந்ததே.

Pant-1

- Advertisement -

மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக காயமடைந்த பண்டுக்கு பதிலாக தற்போது ராகுல் இந்தியரின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் இரண்டு போட்டிகளிலும் தொடர்ந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் மீண்டும் இந்திய அணியில் இணைந்து விளையாடுவது குறித்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : ரிஷப் பண்ட் இளம் வீரர் அவரிடம் உள்ள திறமை மிக அதிகமானது. அவருடன் ஐபிஎல் தொடரில் பணியாற்றுவது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

Pant 1

எல்லோரும் நினைப்பதை விட அவர் இந்திய அணியில் ஆடும் தகுதி பெற்றவர் மீண்டும் அவர் இந்திய லெவனில் இடம் பிடிப்பார். அவரது திறனை நிச்சயம் அவர் நிரூபிப்பார் என்றும் பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement