Worldcup : இந்த உலகக்கோப்பை நிச்சயம் இந்த அணிதான் வெல்லும் – ரிக்கி பாண்டிங்

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Ponting
- Advertisement -

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. நாளை இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இப்போதே தொடரை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள்.

இந்நிலையில் தற்போது உலக கோப்பையை வெல்லும் அணி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்த உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலமாக இருக்கின்றன இருப்பினும் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் அது வருகை காரணமாக ஆஸ்திரேலிய அணியும் பலமாகவே உள்ளது.

ஆனால் இந்த உலகக் கோப்பை பொருத்தமட்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு சவால் விடும் வகையில் மிக வலிமையான வகையில் இங்கிலாந்து அணி இந்த தொடரில் களமிறங்க உள்ளது. அந்த அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வருவதும் மேலும் இங்கிலாந்தில் உலகக்கோப்பை நடைபெறுவதால் அது மேலும் ஒரு சிறப்பம்சமாக இங்கிலாந்து அணிக்கு உலக கோப்பை தொடரை வெல்ல உதவும் என்பதால் இந்த முறை இங்கிலாந்து அணிக்கு உலக கோப்பை என்பது எனது கருத்து என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

Advertisement