அது 100% நடக்கும்.. ரிஷப் பண்ட் கீப்பிங் செய்ய ஆரம்பிச்சுட்டாரு.. ரிக்கி பாண்டிங் சொன்ன நற்செய்தி

Ricky Ponting 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி துவங்குகிறது. இந்த தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக இளம் இந்திய வீரர் ரிசப் பண்ட் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. ஏனெனில் 2022 டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கிய அவர் அதிர்ஷ்டத்துடன் உயிர் தப்பினார். அதற்காக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட அவர் கடந்த ஒரு வருடமாக எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை.

குறிப்பாக கடந்த வருடம் நடந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல், ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை ஆகிய 3 தொடர்களில் விளையாடாத அவர் காயத்திலிருந்து குணமடைந்து வந்தார். தற்போது ஓரளவு நன்றாக குணமடைந்து மீண்டும் பயிற்சிகளை மேற்கொண்ட அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு ஃபிட்டாக இருப்பதாக பெங்களூருவில் உள்ள என்சிஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

- Advertisement -

ரிஷப் பண்ட் விளையாடுவார்:
அதனால் 2024 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் குணமடைந்தப் பின் எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாமல் இருக்கும் அவர் கடினமான விக்கெட் கீப்பிங் வேலையை செய்வாரா அல்லது கேப்டனாக மட்டும் விளையாடுவாரா அல்லது சாதாரண பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்குவாரா என்பது இன்னும் குழப்பமாகவே இருக்கிறது.

இந்நிலையில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் பயிற்சிகளை செய்து வருவதாக டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். எனவே 2024 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் 100% விளையாடுவது உறுதி என்றும் பாண்டிங் கூறியுள்ளார். இருப்பினும் அவர் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடுவாரா அல்லது கீப்பராக செயல்படுவாரா என்ற முடிவை இன்னும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கும் பாண்டிங் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அது மிகப்பெரிய முடிவு. நாங்கள் அதை எடுக்க வேண்டும். ஏனெனில் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் அவர் நேராக கேப்டன்ஷிப் செய்வதற்கு வருவார் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஒருவேளை முழுமையாக ஃபிட்டாக இல்லாமல் போனாலும் நாங்கள் அவரை வித்தியாசமான வேலையில் பயன்படுத்துவோம். அந்த முடிவை நாங்கள் விரைவில் எடுப்போம். கடந்த சில வாரங்களாக அவர் சில பயிற்சி போட்டிகளில் விளையாடியது எங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது”

“பழைய ஃபிட்னெஸ் பெறுவதற்காக அவர் கடினமாக வேலை செய்துள்ளார் என்பதை நாங்கள் அறிவோம். அவர் ஒரு பயிற்சிப் போட்டியில் கீப்பிங் வேலை செய்தார். மற்றொரு போட்டியில் ஃபீல்டராக பயிற்சி எடுத்த அவருக்கு பேட்டிங் ஒரு பிரச்சினையாக இல்லை. இம்முறையும் அவர் ஐபிஎல் தொடரில் நேரத்திற்கு விளையாட வர மாட்டாரோ என்ற கவலை எங்களிடம் இருக்கிறது. ஏனெனில் கடந்த வருடம் அவர் விளையாடாதது எங்களுக்கு பெரிய இழப்பு. தற்போது அவர் விளையாட வருவதைப் பார்க்க மொத்த உலகமும் காத்திருக்கிறது” என்று கூறினார்.

Advertisement