செப்டம்பர் 19 ஆம் தேதி துபாயில் துவங்கும் ஐ.பி.எல் தொடர். முதல் போட்டி யாருக்கு தெரியுமா ? – ரசிகர்களுக்கு ட்ரீட் தான்

Ganguly-ipl
IPL MI
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கிய 14 ஐபிஎல் தொடரானது வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக 29 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. மேலும் பலமுறை தள்ளிவைக்கப்பட்ட இந்த தொடரானது தற்போது மீண்டும் துவங்குவது உறுதியாகியுள்ளது. அதையடுத்து 31 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் இந்தியாவில் இந்த தொடரை நடத்த முடியாது சூழ்நிலை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்து இருந்தது.

IPL

- Advertisement -

மேலும் இதுகுறித்த அட்டவணையும் விரைவில் வெளியிடுவோம் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஐபிஎல் தொடங்குவதற்கான அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியாகியிட்டுள்ளது பி.சி.சி.ஐ. அதன்படி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வரை ஐபிஎல் தொடரானது நடைபெற இருக்கிறது.

இந்த எஞ்சியுள்ள தொடரின் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுவதால் இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் செப்டம்பர் 20ஆம் தேதி பெங்களூரு அணியும், கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

CskvsMi

முதல் போட்டியானது துபாயில் துவங்குகிறது. அதேபோன்று கடைசி இறுதிப்போட்டியும் துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்திய நேரப்படி ஐபிஎல் போட்டிகள் இரவு ஏழரை (7.30) மணிக்கு துவங்கும். அதேபோன்று ஒரு நாளில் இரண்டு போட்டிகள் இருக்கும் போது மாலை மூன்று முப்பது (3.30) மணிக்கு போட்டிகள் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளன.

இந்த ஐபிஎல் தொடருக்கான புள்ளி பட்டியலில் தற்போது டெல்லி அணி 6 வெற்றிகளுடன் முதலிடத்திலும், சென்னை அணி 5 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement