RCB vs RR : வெற்றி, தோல்வி இல்லாமல் முடிந்த பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் போட்டி – மேட்ச் ரிப்போர்ட்

ஐ.பி.எல் தொடரின் 49 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு துவங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக 11.26 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு

RCB
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 49 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு துவங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக 11.26 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

Kohli

- Advertisement -

இந்த போட்டியில் மழையின் குறுக்கீடு காரணமாக போட்டி தாமதமாக துவங்கியதால் போட்டி 20 ஓவர்களில் இருந்து 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை அடித்தது. கோலி 7 பந்துகளில் 25 ரன்களை குவித்தது. டிவில்லியர்ஸ் 4 பந்துகளில் 10 ரன்களை அடித்தார். ராஜஸ்தான் அணி சார்பாக ஷ்ரேயாஸ் கோபால் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 63 ரன்கள் என்ற இலக்குடன் ஆட ஆரம்பித்த ராஜஸ்தான் அணி 3.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களை குவித்திருக்கும்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் முதல் அணியாக பெங்களூரு அணி தொடரில் இருந்து வெளியேறியது.

Shreyas Gopal

இதனால் இந்த போட்டி வெற்றி தோல்வி என்ற எந்த முடிவும் இல்லாமல் போனது. இருப்பினும், இரு அணிகளும் அதிரடியாக ஆடியது பார்வையாளர்களுக்கு பரவசத்தை தந்தது.

Advertisement