ஆர்.சி.பி அணிக்கு சோகத்திற்கு வந்த முடிவு. அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள். கப்பை ஜெயிச்சிடுவாங்களோ ? – விவரம் இதோ : IPL 2020

Abrcb
- Advertisement -

ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இத்தனை வருடத்திலும் எதிர்பார்க்கப்பட்ட, அபாரமான அணி ராயல் சேலஞ்சர்ஸ் இன்னும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. அந்த அணி எப்போதும் நல்ல அணியாக தான் கட்டமைக்கப்படும் ,ஆனால் களத்திற்கு வந்து விட்டால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. அந்த அளவிற்கு அந்த அணியை ஏதோ சனி பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது.

Rcb

- Advertisement -

ஒரே ஒரு முறை இறுதிப் போட்டியில் வந்த அணி கோப்பையை எதிரணிக்கு தாரை வார்த்தது. இவ்வாறாக சோகத்துடன் பல வருடங்களாக ஐபிஎல் களத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் பெங்களூரு அணி பல மாற்றங்களை கொண்டு வரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அந்த அணியின் அனைத்து சமூக வலைதள பக்கங்களின் கணக்குகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று இருந்த பெயர் தற்போது ராயல் சாலஞ்சர்ஸ் என மாற்றப்பட்டுள்ளது. டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து வலைத்தளத்திலும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

rcb

பேரை மட்டும்தான் மாற்றினார்கள் என்று பார்த்தால் பக்கங்களிண் ப்ரொபைல் பிச்சர், கவர் பிச்சர் என அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று இன்று வரை தெரியவில்லை. அணி நிர்வாகம் புதிய பொறுப்பு ஏற்றுள்ள நிலையில் இவ்வாறாக பல மாற்றங்களைச் செய்ய உள்ளதாகவும், புதிய லோகோவை வெளியிடப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த பல வருடங்களாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி இம்முறையாவது கோப்பையை வெல்லுமா ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இந்திய அணியின் கேப்டன் கோலி அந்த அணியின் கேப்டனாக தொடர்ச்சியாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement