2 ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பி.சி.சி.ஐ – விவரம் இதோ

Jadeja
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டுக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதுவரை தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியதே இல்லை என்பதனால் இந்த முறையாவது டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்க வேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தனர்.

ஆனால் டிசம்பர் 26-ஆம் தேதி செஞ்சுரியன் நகரில் தொடங்கிய இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி டிசம்பர் 28-ஆம் தேதியான நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியானது இந்திய அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது. மேலும் ஜனவரி 3-ஆம் தேதி துவங்கும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தாலோ அல்லது டிரா செய்தாலோ மீண்டும் தென்னாப்பிரிக்க அணியிடம் தொடரை இழக்க நேரிடும்.

அதே வேளையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்த தொடரை சமன் செய்யவாவது வாய்ப்பு கிடைக்கும். இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியின் போது ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முதுகு பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக விளையாட முடியவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து அவர் எப்போது முழு உடற்தகுதி பெறுவார்? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ சார்பில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தற்போது ரவீந்திர ஜடேஜா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு உடற்தகுதியை எட்டி விட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தெம்பா பவுமாவிற்கு ஏற்பட்ட காயத்தால் மாபெரும் சாதனையை தவறவிட்ட மார்கோ யான்சன் – விவரம் இதோ

மேலும் முதல் கட்டமாக அவர் இன்றைய பயிற்சியில் 30 மீட்டர் முதல் 40 மீட்டர் வரை ஓட்ட பயிற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டாவது போட்டியின் போது கட்டாயம் அவர் போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு முழு உடற்தகுதியுடனே இருப்பதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement