ஐபிஎல் 2025 ஏலத்தில் தமிழக வீரர் அஸ்வினை எந்த அணியும் வாங்கக் மாட்டாங்க.. சேவாக் அதிரடி விமர்சனம்

Virender Sehwag 6
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் 9 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் சஞ்சு சாம்சன் தலைமையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை வலுவாக பிடித்துள்ள ராஜஸ்தான் பிளே ஆப் சுற்று வாய்ப்பையும் 90% உறுதி செய்துள்ளது. இந்த வருடமும் அந்த அணிக்கு சுழல் பந்து வீச்சு துறையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சஹால் ஆகியோர் ஜோடியாக எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக சஹால் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை எடுத்து அசத்தி வருகிறார். இருப்பினும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 9 போட்டிகளில் வெறும் 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபத்திய இங்கிலாந்து தொடரில் 500 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின் மிகப்பெரிய சாதனை படைத்ததை அனைவரும் அறிவோம்.

- Advertisement -

சேவாக் விமர்சனம்:
இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் சமீபத்திய வருடங்களாகவே ஓரளவு துல்லியமாக பந்து வீசும் அவர் பெரியளவில் விக்கெட்டுகளை எடுப்பதில்லை. குறிப்பாக 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்ட அவர் குறைந்த ரன்களை கொடுத்தாலும் விக்கெட்டுகளை எடுத்து போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனாலேயே இந்திய அணியில் கழற்றி விடப்பட்ட அவர் 2024 ஐபிஎல் தொடரில் 2 விக்கெட்டுகளை 9க்கும் மேற்பட்ட எக்கனாமியில் எடுத்து கொஞ்சம் சுமாராகவே பந்து வீசி வருகிறார்.

இந்நிலையில் பெரிய அனுபவத்தை கொண்டுள்ள அஸ்வின் அதிக விக்கெட்களையும் எடுக்கவில்லை குறைந்த எகனாமியிலும் பந்து வீசவில்லை என்று வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார். எனவே 2025 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை எந்த அணியும் வாங்க மாட்டார்கள் என்று தெரிவிக்கும் சேவாக் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஸ்ட்ரைக் ரேட் முக்கியம் அல்ல என்று கேஎல் ராகுல் சொன்னது போலவே இது அமைந்துள்ளது. அதாவது விக்கெட்டுகளை எடுக்கும் போது பந்து வீச்சில் எக்கனாமி முக்கியமல்ல என்று அஸ்வின் சொன்னார். ஆனால் புள்ளிவிவரங்கள் நன்றாக இல்லையென்றால் அடுத்த வருடம் அஸ்வினை ஏலத்தில் கூட யாரும் வாங்க மாட்டார்கள். ஒரு பவுலரை நீங்கள் தேர்ந்தெடுக்கும் போது அவர் 25 – 30 ரன்களை மட்டும் கொடுக்க வேண்டும் அல்லது நிறைய விக்கெட்களை எடுத்து 2 – 3 ஆட்டநாயகன் விருதுகளை வெல்ல வேண்டும் என்றே நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்”

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணியின் தொடர் தோல்விகளுக்கு காரணமே இதுதான்.. கலங்கி நிற்கும் ஸ்டீபன் பிளமிங் – விவரம் இதோ

“சஹால், குல்தீப் போன்ற அஸ்வினுடைய போட்டியாளர்கள் இங்கே விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். நாம் ஆஃப் ஸ்பின் பந்துகளை வீசினால் அடி வாங்குவோம் என்று அஸ்வின் நினைக்கிறார். அதனால் கேரம் பந்துகளை வீசும் அவர் விக்கெட்டுகள் எடுப்பதில்லை. எனவே விக்கெட்டுகளை எடுக்காமல் ரன்களை சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருந்தால் அஸ்வின் போன்றவருக்கு என்னுடைய அணியில் இடம் கிடைக்காது” என்று கூறினார்.

Advertisement