இதை எப்போவோ செஞ்சுருக்கணும்.. 37 வயசுல தான் நானே கத்துக்குறேன்.. லபுஸ்ஷேனை போல்டாக்கிய கேரம் பால் பற்றி அஸ்வின்

Marnus Labuschange
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்திய கிரிக்கெட் அணி ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றுள்ளது. இத்தொடரில் சுமார் 2 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் போட்டியில் 1 விக்கெட்டும் 2வது போட்டியில் 3 விக்கெட்டுகளும் எடுத்து தம்மை சாம்பியன் வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

குறிப்பாக 2வது போட்டியில் வலது கை பேட்ஸ்மேனாக மாறி சவாலை கொடுத்த டேவிட் வார்னரை அவுட்டாகிய அவர் மற்றொரு தரமான ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனாக பாராட்டப்படும் மார்னஸ் லபுஸ்ஷேனை மேஜிக் பந்தை வீசி கிளீன் போல்டாக்கினார். சொல்லப்போனால் பிரத்தியேகமான கேரம் பந்தில் எக்ஸ்ட்ரா வித்தியாசத்தை புகுத்திய அஸ்வின் எப்படி தம்மை கிளீன் போல்டாக்கினார் என்பது புரியாமல் லபுஸ்ஷேன் மிகுந்த ஆச்சரியம் கலந்த ஏமாற்றத்துடன் பெவிலியின் திரும்பினார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

திட்டத்தின் பின்னணி:
இந்நிலையில் வழக்கமான 2 விரல்களைத் தாண்டி தம்முடைய 3வது விரலை பயன்படுத்தி அந்த கேரம் பந்தை வீசியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். இந்த வித்தையை எப்போதோ செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இப்போதாவது செய்வதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். இது பற்றி பிசிசிஐ இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“நான் லென்த்தை கச்சிதமாக வைக்க விரும்பினேன். அதே சமயம் பேட்ஸ்மேனுக்கு வெளியே எடுத்துச் சென்று வேகத்தையும் சற்று மாற்றினேன். அது போன்ற பந்துகளை அவர்கள் சிறப்பாக எதிர்கொள்ள தடுமாறுகிறார்கள் என்பதை உணர்ந்தேன். எனவே நான் உருவாக்கும் அந்த கோணமும் பிடியின் மாற்றத்தையும் வைத்து கேரம் ஆஃப் பிரேக் பந்தை வீச என்னுடைய 3வது விரலை பயன்படுத்தினேன்”

- Advertisement -

“அது என்னை நல்ல நிலையில் வைத்திருக்கும் என்று நம்புகிறேன். மேலும் இது போன்ற பந்துகளுக்காக என்சிஏவில் சைராஜ் பஹதூளேவுடன் இணைந்து வேலை செய்துள்ளேன். குறிப்பாக வித்தியாசமான கோணம் மற்றும் பிடிப்புகளில் வேலை செய்தேன். அங்கே என்னுடைய முன் மற்றும் பின் பகுதிகளை பார்க்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன். இந்த வகையில் நாங்கள் 3 – 4 நாட்கள் வேலை செய்தோம்”

இதையும் படிங்க: IND vs AUS : நாளைய 3 ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

“இத்தனை வருடங்களாக கிரிக்கெட்டில் விளையாடியுள்ள நான் இதை எப்போதோ செய்திருக்க வேண்டும். ஆனால் இப்போதாவது அதை செய்தவதில் மகிழ்ச்சியடைகிறேன். இதை நான் பயிற்சி எடுத்து செய்ய வேண்டுமென ஏற்கனவே விரும்பி கொண்டிருந்தேன். ஏனெனில் சாதாரண கேரம் வீசும் போது பந்து சறுக்கும் நன்மையும் பந்தை வெளியிடும் கோணமும் ஒன்றாக இருக்கும். எனவே அந்த 2 கூர்மையையும் ஒன்றாக நினைக்க நினைத்தேன். தற்போது அதை செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.

Advertisement