IND vs BAN : ரிஷப் பண்ட் சோம்பேறித்தனமே விராட் கோலிக்கு பதிலாக அக்சர் படேல் களமிறங்க காரணம் – பின்னணியை பகிர்ந்த அஷ்வின்

Ravichandran Ashwin Rishabh Pant
- Advertisement -

வங்கதேசத்துக்கு நடைபெற்று முடிந்த எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் வெறும் 145 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு விராட் கோலி, புஜாரா, ராகுல் உள்ளிட்ட டாப் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 74/7 என தோல்வியின் பிடியில் சிக்கியது. அந்த சமயத்தில் 8வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 29* ரன்களும் ரவிச்சந்திரன் அஷ்வின் 42 ரன்களும் குவித்து 3 விக்கெட் வித்யாசத்தில் திரில் வெற்றி பெற வைத்தனர். அதனால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பு தக்க வைத்துக்கொண்ட இந்தியா வரலாற்றில் முதல் முறையாக வங்கதேசத்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் சந்திக்க வேண்டிய தோல்வியிலிருந்தும் தப்பியது.

அந்த அவமானத்திலிருந்து காப்பாற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆல் ரவுண்டராக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்றது தமிழக ரசிகர்களுக்கு பெருமையாகவும் அமைந்தது. முன்னதாக அப்போட்டியில் கேஎல் ராகுல், புஜாரா ஆகியோர் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டான போது விராட் கோலி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்சர் பட்டேல் பேட்டிங் செய்ய வந்தது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. இருப்பினும் அந்த சமயத்தில் வலது – இடது கை ஜோடி தேவை என்பதற்காக அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

சோம்பேறி பண்ட்:
ஆனால் அடுத்ததாக சுப்மன் கில் ஆட்டமிழந்ததால் வந்த விராட் கோலி 1 ரன்னில் அவுட்டான போது மற்றொரு இடது கை பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜெயதேவ் உனட்கட் பேட்டிங் செய்ய வந்தது நிறைய முன்னாள் வீரர்களை ஆச்சரியப்படுத்தியது. ஆனால் அந்த சமயத்தில் விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் தான் வந்திருக்க வேண்டும் என்று தெரிவித்த அஜய் ஜடேஜா மற்றும் சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் பேட்டிங்கில் செய்த அந்த மாற்றம் வங்கதேசத்துக்கு ஆரம்பத்திலேயே இந்தியா பயந்து விட்டதை காட்டியதாக விமர்சித்தனர்.

இந்நிலையில் 3வது நாளின் மாலை நேரத்தில் நிகழ்ந்த அந்த அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு ரிஷப் பண்ட் தான் காரணமென்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். குறிப்பாக மாலை நேரத்தில் விக்கெட் விழுந்ததால் நைட் வாட்ச்மேன் தேவையா என்று பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கேட்ட போது தேவையில்லை என்று சொல்லி தைரியமாக விராட் கோலி பேட்டிங் செய்ய சென்றதாக தெரிவிக்கும் அவர் ரிஷப் பண்ட் மட்டும் அடுத்த நாள் பேட்டிங் செய்ய செல்வேன் என்று அடம் பிடித்ததாக ருசிகரமான பின்னணியை பகிர்ந்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அந்த சமயத்தில் விராட் கோலியிடம் உங்களுக்கு நைட் வாட்ச்மேன் தேவையா என்று விக்ரம் ரத்தோர் கேட்டார். அதற்கு நைட் வாட்ச்மேன் எனக்கு தேவையில்லை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று விராட் கோலி பதிலளித்தார். மேலும் பொதுவாக உடைமாற்றும் அறையில் ரிசப் பண்ட் ஒரு தலையை துண்டை போட்டுக்கொண்டு மேஜையில் படுத்திருப்பார். அவர் ஏன் அப்படி செய்கிறார் என்பதற்கான சரியான காரணம் எனக்கு இதுவரை தெரியாது”

“இருப்பினும் அந்த சமயத்தில் விக்ரம் ரத்தோர் அவரிடம் சென்று விராட் கோலி நைட் வாட்ச்மேன் தேவையில்லை என்று சொல்லி விட்டார் உங்களுக்கு தேவையா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு எனக்கு இன்று இரவு முழுவதும் நைட் வாட்ச்மேன் வேண்டும். நான் அடுத்த நாள் காலையில் சென்று பேட்டிங் செய்கிறேன் என்று ரிசப் பண்ட் அவரிடம் பதிலளித்தார். அதைக்கேட்ட என்னால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை”

இதையும் படிங்கடி20 மட்டுமல்ல இனி ஒருநாள் தொடருக்கும் ஹார்டிக் பாண்டியா தான் கேப்டன் – பி.சி.சி.ஐ கொடுத்த ஹின்ட்

“அதை விட அப்போது நம்மிடம் ஜெயதேவ் உடன்கட் மட்டுமே எஞ்சியுள்ளதால் நான் யாரை அனுப்பட்டும்? என்று விக்ரம் ரத்தோர் அவரிடம் மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு அஷ்வின் அல்லது யாரையாவது அனுப்பி விடுங்கள் என்று பதிலளித்த ரிசப் பண்ட் நான் நாளை பேட்டிங் செய்ய செல்கிறேன் என்று கூறினார்” என தெரிவித்தார். மொத்தத்தில் அந்த இடத்தில் பேட்டிங் செய்ய செல்லாமல் ரிசப் பண்ட் அடம் பிடித்ததே அக்சர் படேல், உனட்கட் ஆகியோர் முன்கூட்டியே பேட்டிங் செய்ய வந்ததற்கான காரணம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

Advertisement