இங்கிலாந்தில் அந்த 3 பேரும் சேந்தா வெற்றி இந்தியாவுக்கே.. பும்ராவுக்கு இந்த பிரேக் கொடுங்க.. சாஸ்திரி அட்வைஸ்

Ravi Shastri
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஐபிஎல் முடிந்ததும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரில் 2007க்குப்பின் இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெற இந்திய அணி முயற்சிக்க உள்ளது.

அந்தத் தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து விளையாட உள்ளது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆஸ்திரேலிய தொடரில் தனி ஒருவனாக இந்தியாவின் வெற்றிக்கு போராடிய அவர் கடைசிப் போட்டியில் காயத்தால் வெளியேறினார். அதிலிருந்து குணமடைந்து 2025 ஐபிஎல் தொடரில் விளையாடும் அவரைப் போலவே கடந்த ஆஸ்திரேலிய தொடரில் விளையாடாத முகமது ஷமியும் தற்போது காயத்தை கடந்து விளையாடி வருகிறார்.

- Advertisement -

சாஸ்திரி கணிப்பு:

இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் ஷமி, பும்ரா, சிராஜ் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அசத்தினால் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆஸ்திரேலிய தொடரைப் போல பும்ராவை 5 போட்டிகளிலும் விளையாட வைக்காமல் 3வது போட்டியில் இடைவெளி கொடுத்து பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அப்போது தான் காயத்தை தவிர்க்க முடியும் என்றும் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பும்ரா விஷயத்தில் நான் மிகமிக கவனத்துடன் இருப்பேன். அவருக்கு ஒரே சமயத்தில் 2 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கொடுத்து பின்னர் இடைவெளி கொடுப்பேன். அந்த வகையில் நீங்கள் அவரை 4 போட்டிகளில் விளையாட வைக்கலாம். ஒருவேளை பும்ரா முதல் போட்டியிலேயே அபாரமாக பவுலிங் செய்தால் அவரை நீங்கள் 5 போட்டிகளிலும் பயன்படுத்த விரும்புகிறீர்கள்”

- Advertisement -

பும்ரா முக்கியம்:

“ஆனால் அப்படி விளையாட வைத்தால் தான் அவருடைய உடல் பாதிப்பை சந்திக்கும். எனவே லேசான காயம் இருந்தாலும் ஓய்வு எடுக்கிறேன் என்று வெளிப்படையாக சொல்வதற்கான உரிமை பும்ராவுக்கு வழங்கப்பட வேண்டும். சிராஜ், ஷமி, பும்ரா ஆகிய மூவரும் முழுமையாக ஃபிட்டாக விளையாடினால் இங்கிலாந்துக்கு பிரச்சனையைக் கொடுப்பார்கள்”

இதையும் படிங்க: அவர் ஆடும்போது கெவின் பீட்டர்சனை பார்ப்பது போன்று இருக்கு.. பஞ்சாப் வீரரை பாராட்டிய – சுரேஷ் ரெய்னா

“சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் தம்முடைய பெயர் இல்லாததால் சிராஜ் வலியை சந்தித்துள்ளார். அதுவே உங்களுக்கும் தேவை. தற்போது அவர் வரை பலகைக்கு சென்று மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். தற்போது நீண்ட தூரம் ஓடி வந்து வேகத்தையும் அதிகரித்துள்ள அவர் ஃபார்முக்கு வந்துள்ளது இங்கிலாந்துக்கு செல்வதற்கு முன்பாக இந்தியாவுக்கு சிறந்த விஷயமாகும்” என்று கூறினார்.

Advertisement