ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷனுக்கு ஆதரவாக – ரவி சாஸ்திரி வெளியிட்ட பதிவு

Ravi-Shastri
- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ வருடாந்திர சம்பள ஒப்பந்த ஊழியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பொதுவாக அக்டோபர் 1 ஆம் தேதி, 2023 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி, 2024 வரை குறைந்தபட்சம் 3 டெஸ்ட் போட்டிகள் அல்லது 8 ஒருநாள் போட்டிகள் அல்லது 10 டி20 போட்டிகளில் விளையாடும் வீரர்கள் கிரேட் அடிப்படையில் இந்த பட்டியலில் இடம்பெறுவார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலின் படி ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய நான்கு பேரும் ஏ ப்ளஸ் பிரிவில் 7 கோடி ரூபாய்க்கு ஒப்பந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அதேபோன்று ஹார்டிக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், சுப்மன் கில், கே.எல் ராகுல் ஆகியோர் ஏ பிரிவில் 5 கோடி ரூபாய் ஒப்பந்த பட்டியலில் இணைந்திருக்கிறார்கள்.

- Advertisement -

அவர்களை தவிர்த்து சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்றோர் 3 கோடி ரூபாய் சம்பள பட்டியலில் பி பிரிவில் இடம் பிடித்துள்ளார்கள்.

இவர்களை தவிர்த்து இளம் வீரர்களான ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாகூர், ஷிவம் துபே, ரவி பிஷ்னாய், ஜித்தேஷ் சர்மா, பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஸ்தீப் சிங், ஆவேஷ் கான், கே.எஸ் பரத் போன்ற வீரர்கள் ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் சி பிரிவில் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த மத்திய ஒப்பந்த சம்பள பட்டியலில் இருந்து முன்னணி வீரர்களான ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரது பெயர்கள் நீக்கப்பட்டது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே முன்னணி வீரர்களாக அவர்கள் விளையாடி வந்த போதிலும் ரஞ்சி கோப்பையில் விளையாடும் படி கேட்டுக் கொண்ட பிசிசிஐயின் வேண்டுகோளை மதிக்காமல் செயல்பட்டதாக கூறி அவர்கள் இருவரையும் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியதாக தெரிகிறது.

இதையும் படிங்க : இன்னும் ஐ.பி.எல் துவங்க சில வாரங்களே உள்ள நிலையில் சி.எஸ்.கே அணிக்கு ஏற்பட்ட – மிகப்பெரிய பின்னடைவு

இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷனுக்கு ஆதரவாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த கருத்தில் : கிரிக்கெட்டில் கம்பேக் என்பது உள்ளார்ந்த ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் சவால்களை எதிர்கொண்டு வலுவாக திரும்பி வாருங்கள். உங்களது கடந்த கால சாதனைகள் உங்களை பறை சாற்றுகின்றன. நீங்கள் மீண்டும் வெற்றி பெறுவீர்கள் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Advertisement