இவரோட பவுலிங் வேறலெவல். பேட்டிங் பிட்சிலும் சூப்பரா கன்ட்ரோல் பண்றாரு – ரவி சாஸ்திரி புகழாரம்

Shastri
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் அடித்தது.

- Advertisement -

துவக்க வீரர்கள் படிக்கல் 54 ரன்களும், பின்ச் 52 ரன்களும் அடித்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த கோலி 3 ரன்களுக்கு ஆட்டம் இருந்தாலும் டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடி 55 ரன்களும், துபே 27 ரன்கள் அடித்து அணி அணியின் ரன் குவிப்புக்கு உதவினர். அதனைத்தொடர்ந்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி துவக்கத்தில் ரோகித் சர்மா 8 ரன்கள், டிகாக் 14 ரன்கள், சூர்யகுமார் யாதவ் டக் அவுட் என 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது.

ஆனால் பின்னால் நங்கூரம் பாச்சிய இஷான் கிஷன் மற்றும் பொல்லார்ட் ஜோடி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்ற கட்டத்திலிருந்து போட்டியை சிறப்பாக இறுதிவரை கொண்டுசென்றனர். 5 ஓவருக்கு 90 ரன்கள் தேவை என்ற நிலையிலிருந்து போட்டியை “டை” ஆக்கினார்கள். இஷன் கிஷன் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பொல்லார்ட் 60 ரன்கள் அடித்து இறுதிவரை களத்தில் இருந்தார். இரு அணிகளும் 201 ரன்களை குவித்தது போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் இரு அணிகளும் வீரர்களும் மாறி மாறி பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் என அடித்து கிட்டத்தட்ட 402 ரன்களை விளாசினர். அப்படி நேற்று இந்த மைதானம் பேட்டிங்க்கு அவ்வளவு ஒத்திவைத்தது. ஆனால் அந்த மைதானத்தில் நேற்று பெங்களூரு அணியை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் பவர்ப்ளே ஓவர்களில் 3 ஓவர்களை வீசி 7 மட்டும் விட்டுக் கொடுத்து முக்கியமான ரோகித் சர்மாவின் விக்கெட்டை எடுத்தார். அதுமட்டுமின்றி 4 ஓவர் மொத்தமாக வீசிய அவர் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து தனது சிறப்பான பங்களிப்பை அளித்தார்.

sundar 1

இந்நிலையில் இதை கவனித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அவரைப் பாராட்டிப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடும் பொழுது தனது சிறப்பான பந்துவீச்சை வாஷிங்டன் சுந்தர் வெளிப்படுத்தியுள்ளார். அனைவரும் பந்துவீச்சில் சற்று தடுமாறிய நிலையில் சரியாக தனது திட்டத்தை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக செயல்படுத்தி பந்துவீசினார் என்று அவரைப் புகழ்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement