ரோஹித், பும்ரா, கோலி கிடையாது.. அந்த 2 பேர் டி20 உ.கோ மேட்ச் வின்னரா இருப்பாங்க.. சாஸ்திரி கருத்து

Ravi Shastri 2
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அதில் களமிறங்கி கோப்பையை வெல்வதற்காக 15 பேர் கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த அணியில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ், பும்ரா, ஜெய்ஸ்வால், சிவம் துபே போன்ற அனுபவமும் இளமையும் கொண்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

எனவே 2007க்குப்பின் இம்முறையாவது டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்தி வெற்றிக்கு போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சராசரியாக 36 வயதை கடந்து விட்ட அவர்கள் அடுத்த டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது அசாத்தியமானதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

2 முக்கிய வீரர்கள்:
இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துபே ஆகியோர் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய வீரர்களாக செயல்படுவார்கள் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். குறிப்பாக சிஎஸ்கே அணியில் மிடில் ஓவர்களில் அதிரடியாக சிக்சர்களை பறக்க வேண்டும் துபே வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் அசத்துவார் ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த தொடரில் 2 ஜென்டில்மேன்களை நீங்கள் பார்க்க வேண்டும். இருவருமே இடதுகை வீரர்கள். இருவருமே முதல் உலகக் கோப்பையில் விளையாடுகின்றனர். ஒன்று ஜெய்ஸ்வால். அவரைப் பற்றி நமக்கு அதிகமாக தெரியும். இங்கிலாந்துக்கு எதிராக அபாரமாக விளையாடிய அவர் டாப் ஆர்டரில் பயமின்றி தம்முடைய ஷாட்டுகளை அடிக்கக் கூடியவர்”

- Advertisement -

“ஆனால் மிடில் ஆர்டர் விளையாடக்கூடிய இவரை கண்டிப்பாக பாருங்கள். ஏனெனில் அவர் மேட்ச் வின்னர். வேடிக்கைக்காக சிக்சர்களை அடிக்கக்கூடிய இவர் ஸ்பின்னர்களை பந்தாடுவார். அவர் வெஸ்ட் இண்டீஸில் உள்ள சிறிய தீவுகளில் பந்தை மைதானத்திற்கு வெளியே அடிக்கக்கூடியவர். மிகவும் பெரியதாக நீண்ட தூரத்தில் அடிக்கக்கூடிய அவர் சுழல் பந்துகளை தெறிக்க விடுபவர்”

இதையும் படிங்க: இவர் பிளேயரா இல்ல ஏலியனான்னு டிஎன்ஏ டெஸ்ட் பண்ணுங்க.. இந்திய வீரரை பாராட்டிய வேன் பர்னல்

“வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் தன்னுடைய ஆட்டத்தில் வேலை செய்துள்ள அவர் 5, 6வது இடத்தில் வெற்றிக்கான சாவியை பிடிக்கக்கூடியவர். ஒருவர் 20 – 25 பந்துகளில் போட்டியை மாற்றுவதற்கு தேவைப்பட்டால் அவர் தான் உங்களுடைய வீரர். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் பெரும்பாலான சமயங்களில் 200 என்பதை தொடும். டி20 உலகக் கோப்பை போன்ற தொடரில் 190, 200 ரன்களை அடித்து இந்தியா முன்னோக்கி செல்வதற்கு அவர் உதவுவார். எனவே இந்த இடது கை வீரரின் ஆட்டத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் பார்க்கலாம்” என்று ஐசிசி இணையத்தில் கூறினார்.

Advertisement