இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயரை இங்கிலாந்தில் கழற்றி விட்டாலும்.. அந்த வாய்ப்பை மறுக்க முடியாது.. ரவி சாஸ்திரி

Ravi Shastri
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் 2024 – 25 மத்திய சம்பள ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. அதில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே போல விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ஜடேஜா ஆகியோர் ஏ ப்ளஸ் பிரிவில் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்தப் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் கடினமாக உழைத்து கம்பேக் கொடுத்துள்ளார். சமீப வருடங்களாகவே இந்திய அணிக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி வரும் அவர் 2023 உலகக் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தினார். இருப்பினும் கடந்த வருடம் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காயத்தை சந்தித்த அவர் விரைவாக குணமடைந்த போது ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியது.

- Advertisement -

இங்கிலாந்து தொடர்:

ஆனால் அதைச் செய்ய தவறியதால் கோபமடைந்த பிசிசிஐ அவரை மத்திய சம்பளப் பட்டியலிலிருந்து அதிரடியாக நீக்கியது. அதனால் பின்னடைவை சந்தித்த ஸ்ரேயாஸ் அடுத்ததாக உள்ளூரில் விளையாடியதுடன் 2025 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக கொல்கத்தா வெல்ல உதவினார். அதன் காரணமாக கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததும் அவரை இந்திய ஒருநாள் அணிக்குள் கொண்டு வந்தார்.

அந்த வாய்ப்பில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்த ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியா 12 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார். அதன் காரணமாக தற்போது மீண்டும் அவரை பிசிசிஐ தாமாக முன்வந்து மத்திய சம்பள ஒப்பந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் முடிந்ததும் நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

ரவி சாஸ்திரி கருத்து:

இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் சர்பராஸ் கான், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்களின் போட்டி காரணமாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆனால் ஒருநாள், டி20 அணியில் அவரை இந்திய அணியால் கழற்றி விட முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் சாஸ்திரி பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: 3 விக்கெட்ஸ்.. வங்கதேசத்தை சொந்த மண்ணில் சாய்த்த ஜிம்பாப்வே.. 7 வருடம் கழித்து 2021க்குப்பின் சாதனை வெற்றி

“ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த 18 மாதங்களாக இந்தியாவுக்காக விளையாடிய விதத்தில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் அவரைக் கண்டிப்பாக விட முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் மீண்டும் விளையாடும் வாய்ப்பை பெறக்கூடும். ஆனால் அது போட்டியைப் பொறுத்தது. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவர் மிகவும் முக்கியமானவர். டெஸ்ட் அணியில் அவருக்கு யார் போட்டியாக வருகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement