ஒருநாள் கிரிக்கெட்ல நல்லா விளையாடணும்னா இதை மட்டும் பண்ணுங்க. சூரியகுமார் யாதவுக்கு அட்வைஸ் குடுத்த – ரவி சாஸ்திரி

Ravi-Shastri-and-SKY
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் நம்பர் ஒன் வீரராக இருக்கும் சூரியகுமார் யாதவ் உலக அளவில் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்தாலும் டி20 கிரிக்கெட்டை தவிர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த தடுமாறியே வருகிறார். அவரது தடுமாற்றத்தை சமீப காலமாக இந்திய அணியும் பார்த்துக் கொண்டுதான் வருகிறது. ஆனாலும் அவரின் திறன் மீதுள்ள நம்பிக்கை காரணமாக எதிர்வரும் ஆஸ்திரேலியா தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 27 போட்டிகளில் விளையாடி இரண்டு அரைசதங்கள் மட்டுமே அடித்து 24 ரன்கள் என்கிற மோசமான சராசரியையே வைத்துள்ளார்.

- Advertisement -

இப்படி ஒருநாள் கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவின் புள்ளி விவரங்கள் பற்றிய விமர்சனங்கள் பலரது மத்தியிலும் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் சூரியகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சாதிக்க வேண்டும் என்றால் சில விடயங்களை கடைபிடித்தால் போதும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி அட்வைஸ் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் சூரியகுமார் யாதவிடம் கொடுக்க வேண்டிய அட்வைஸ் என்னவென்றால் : உங்களுடைய பேட்டிங்கை சிம்பிளாக வைத்துக் கொள்ளுங்கள். 50 ஓவர் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை நிறைய நேரம் உங்கள் கைகளில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்கள் பேட்டிங்கில் நீங்கள் எந்தவொரு மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. டி20 போட்டிகளில் நீங்கள் எவ்வாறு விளையாடுகிறீர்களோ அதேபோன்று ஒருநாள் போட்டியிலும் பாசிட்டிவாக விளையாடுங்கள் ஆனால் நீண்ட நேரம் நம் கைகளில் உள்ளது என்று நினைத்து விளையாடுங்கள் ரன்கள் தானாக வரும். அதோடு 50 ஓவர் போட்டிகளை பொறுத்தவரை நீங்கள் நிலையாக ஐந்து பந்துகளை அதிகமாக கூட எடுத்துக் கொள்ளலாம் அதற்கான அவகாசம் உங்களிடம் இருக்கிறது.

இதையும் படிங்க : இந்திய அணிக்கு மட்டுமல்ல எல்லா டீமுக்குமே இந்த பிரச்சனை இருக்கு – ராகுல் டிராவிட் கருத்து

அதோடு ஆரம்பத்தில் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்தால் மற்ற பேட்ஸ்மேன்களுக்கும் ரன்களை குவிக்க எளிதாக மாறும். பின்னர் 40-50 பந்துகளை எடுத்துக் கொண்டால் தானாகவே உங்களிடம் இருந்து அதிரடி வெளிப்படும் என சூரியகுமார் யாதவிற்கு ரவி சாஸ்திரி அட்வைஸ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement