இந்தியாவில் ஐபிஎல் தொடர்கள் நடைபெற்றபோது சன் ரைசர்ஸ் அணிக்காக ரஷீத் கான் விளையாடினார். அதே போன்று பெங்களூர் அணிக்காக விராட் கோலி விளையாடினார். அப்போது இவ்விருவருக்கும் இடையே நட்பு உண்டானது. பொதுவாக ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் இணைந்து இந்திய வீரர்களுடன் ஒன்றாக ஆடுவதால் தற்போது தேசத்தை தாண்டி அவர்களுக்குள் ஒரு நட்பு உருவாகத்தான் செய்கிறது.
அது போன்று உருவான நட்பு தான் ரஷீத் கான் மற்றும் கோலி உடனான நட்பு. இந்த நட்பின் காரணமாக கடந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக பந்து வீசியதற்காக ரஷீத் கானுக்கு இந்திய அணியின் கேப்டன் கோலி பேட் ஒன்றை பரிசாக அளித்தார். அந்த பேட்டை ரஷீத் காணும் பெற்றுக் கொண்டு அவ்வப்போது சிறப்பாக ஆட வேண்டி நினைக்கும் போட்டிகளில் கோலி கொடுத்த பேட் உபயோகித்து ரன்களை அடிக்கிறார். இதுகுறித்து ரஷித் கான் கூறியதாவது :
கோலி எனக்கு கொடுத்த பேட்டில் நான் எப்போது சிறப்பாக விளையாட நினைக்கிறேனோ அப்போதெல்லாம் அவருடைய பேட்டை பயன்படுத்துவேன். நான் பவுண்டரி அடிக்க வேண்டும் என்று நினைத்து அடித்தால் அந்த பந்து சிக்சருக்கு பறக்கும். அதேபோன்று பலமாக ஆடாமல் பந்து செல்லும் திசையில் ஆடினாலும் பந்து பேட்டில் பட்டு பறக்கும் அவர் கொடுத்த பந்த் பேட் சக்தி வாய்ந்ததாக உள்ளது.
மேலும் அதில் ஆடினாலே ரன்கள் குவித்து வரும் அளவிற்கு அந்த பேட் மாயாஜாலத்தையும் காட்டுகிறது. எனவே அதனை நான் ராசியானதாக வைத்து இருந்தேன். ஆனால் தற்போது அந்த பேட்டை என் சக அணி வீரரான அஸ்கார் எடுத்துக்கொண்டார் நானும் அவளிடம் எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டேன் என்று கோலி பேட் குறித்து ரசித்தான் பேட்டி அளித்தார்