கடந்த 4-5 வருடங்களில் பந்துவீச்சில் சிறப்பாக இருக்கும் அணி இதுதான் – ரஷீத் கான் ஓபன் டாக்

Rashid-khan
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 22 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

kxipvssrh

அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பேர்ஸ்டோ 97 ரன்களையும், வார்னர் 52 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 37 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். இதனால் பஞ்சாப் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி பஞ்சாப் அணிக்கு ஐந்தாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர் (97 ரன்கள்) குவித்த பேர்ஸ்டோ தேர்வானார்.

Bairstow-1

இந்நிலையில் நேற்று போட்டி முடிந்து பிறகு பேசிய சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் கூறுகையில் : அணியின் ஸ்கோர் நன்றாக இருக்கும் பொழுது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச முடியும். பேட்ஸ்மேன்கள் அதிக ரன்களை குவிக்கும்போது நிச்சயம் பந்துவீச எளிமையாக இருக்கும். அந்த வகையில் தற்போது எங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். நானும் சிறப்பாக பந்து வீசியதாக கருதுகிறேன்.

- Advertisement -

எங்கள் அணியில் மிட்செல் மார்ஷ் மற்றும் புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக விலகியது எங்கள் அணிக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு. இருப்பினும் எங்கள் அணி வீரர்கள் சரியான காம்பினேஷனில் இருப்பதால் நிச்சயம் சிறப்பாக ஆட முடியும். மேலும் எங்களது அணி கடந்த 4-5 ஆண்டுகளாக சிறப்பான பந்துவீச்சாளர்களை கொண்ட அணியாக திகழ்கிறது. எங்களுடைய திட்டங்களும் மிக எளிமையானது தான்.

Srh

எந்த மைதானமாக இருந்தாலும் 160 ரன்களுக்குள் எங்களால் சுருட்ட முடியும். அதே போன்று இந்தப் போட்டியிலும் 180 முதல் 185 ரன்கள் சரியானதாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம். ஆனால் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டதால் எங்களுக்கு இன்னும் போட்டி எளிமையானது என்று ரஷீத் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement