இந்த ஆண்டு 12ஆவது ஐ.பி.எல் போட்டித்தொடர் நாளை மாலை முதல் துவங்க உள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகி கொண்டே வருகிறது.
இந்த தொடரில் பங்கேற்கும் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள வீரர்கள் ஐபில் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வந்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சன் ரைசர்ஸ் அணி வீரரான ரஷீத் கான் இன்று அணியில் இணைந்தார். ஐவரும் ஆப்கான் அணி வீரரான முஹம்மது நபியும் அணியில் இணைந்தார்.
இவர்கள் இருவரும் இன்று விமானம் மூலம் ஹைதராபாத் வந்தடைந்தனர். இவர்களை வரவேற்ற அணி நிர்வாகம் காரின் மூலம் அணி வீரர்கள் இருக்கும் ஹோட்டலுக்கு அழைத்து சென்றது. இதனை வீடியோவாக வெளியிட்டுள்ளது சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம். இதோ அந்த வீடியோ :
They’ve arrived, they’ve seen and they’re ready to conquer!
Watch here as @rashidkhan_19 and @MohammadNabi007 join the camp for the upcoming season! #OrangeArmy ???? pic.twitter.com/dObFIBnlhO
— SunRisers Hyderabad (@SunRisers) March 22, 2019
ரஷீத் கான் தற்போது உலகின் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளர் ஆவார். மேலும், கடந்த ஐபில் தொடரின்போது சன் ரைசர்ஸ் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்கினையும் ஆற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக ரஷீத் கான் மிகச்சிறப்பாக ஆடிவருகிறார். இந்த வருடம் அவருடைய ஆட்டம் நிச்சயம் சன் ரைசர்ஸ் அணிக்கு பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.