நேற்றைய போட்டியில் ஜாஸ் பட்லரை போல்ட் ஆக்கி வெளியேற்றினார் ரஷீத் கான் . மேலும், பேட்டிங்கில் 8 பந்துகளில் 15 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். கிரிக்கெட் பந்தில் மட்டுமே இதுவரை தனது வித்தையினை காட்டி வந்த ரஷீத் கான். நேற்று இரவு வாலிபால் பந்தினை தனது கையில் வைத்து நீண்ட நேரம் சுழற்றி அசத்தினார். இதோ அந்த வீடியோ :
All ???????? on the ball. Just @rashidkhan_19 things ????????#SRHvRR pic.twitter.com/LmY3gIZEcB
— IndianPremierLeague (@IPL) March 29, 2019
நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற 8 ஆவது போட்டியில் சன் ரைசர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 198 ரன்களை அடித்தது. அந்த அணி சார்பாக சாம்சன் 55 பந்துகளில் 102 ரன்களை அடித்தார். மேலும், கேப்டன் ரஹானே 70 ரன்களை அடித்தார்.
இதனால் சன் ரைசர்ஸ் அணிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆட துவங்கிய சன் ரைசர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பேர்ஸ்டோ சிறப்பான துவக்கத்தினை அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவர்களில் 110 ரன்களை சேர்த்து. இதனால் பின்னால் வந்த வீரர்கள் எளிமையாக வெற்றிக்கான இலக்கினை அடித்தனர். இதனால் சன் ரைசர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் 69 ரன்களும், பேர்ஸ்டோ 45 ரன்களையும் குவித்தனர்.