KXIP vs KKR : கேட்ச் புடிக்க முயன்று கேட்சையும் விட்டு சிக்ஸரையும் கொடுத்த பஞ்சாப் வீரர் – வீடியோ

நேற்றைய போட்டியில் ஆண்ட்ரு டை வீசிய ஓவரில் ரசல் அடித்த பந்து பவுண்டரி லைனை நோக்கி சென்றது. அப்போது பவுண்டரி லைனில் இருந்த பஞ்சாப் அணி வீரர் அதனை கேட்ச் பிடிக்க முயன்று

Kxip
- Advertisement -

நேற்றைய போட்டியில் ஆண்ட்ரு டை வீசிய ஓவரில் ரசல் அடித்த பந்து பவுண்டரி லைனை நோக்கி சென்றது. அப்போது பவுண்டரி லைனில் இருந்த பஞ்சாப் அணி வீரர் அதனை கேட்ச் பிடிக்க முயன்று கேட்சையும் பிடிக்காமல் சிக்ஸராக மாற்றினார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 52 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வுசெய்தது கொல்கத்தா அணி. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை குவித்தது. குரான் 24 பந்துகளில் 55 ரன்கள் அடித்தார், பூரான் 27 பந்துகளில் 48 ரன்களை குவித்தார்.

பிறகு 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.அதிகபட்சமாக சுபமான் கில் 49 பந்துகளில் 65 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement