கவலையே பட வேணாம். கோலி தெ.ஆ தொடரில் நிச்சயம் இதை செய்வார் – சிறுவயது பயிற்சியாளர் பேட்டி

rajkumar
- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான விராட் கோலியின் தலைமையில் கீழ் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்று முதல் துவங்க உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று செஞ்சூரியன் மைதானத்தில் துவக்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மிகப்பெரிய அழுத்தத்தில் இருக்கிறார். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் சாம்பியன் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வரும் அவர் கடைசியாக 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சதம் அடித்தார். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசியுள்ள அவர் 71 சதத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்க வேண்டியதாக உள்ளது.

kohli 4

- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் சதம் இன்றி விளையாடி வருவதால் அவரது பார்ம் சற்று சரிந்துள்ளது. இந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரிலாவது மீண்டும் அவர் பார்மிற்கு வருவார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் அவரது சிறுவயது பயிற்சியாளரான ராஜ்குமார் சர்மா கோலியின் ரசிகர்களுக்காக ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில் :

விராட் கோலியின் பேட்டிங் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து விடும். அதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. நிச்சயம் இந்த தொடரில் உங்களுக்கு அவர் தனது சிறப்பான பேட்டிங்கின் மூலம் விருந்து அளிப்பார். கடைசியாக அவர் தென்னாப்பிரிக்க மண்ணில் விளையாடிய போது மிகச் சிறப்பான இன்னிங்சை விளையாடி சதம் அடித்திருந்தார். அப்படியே இந்த போட்டியிலும் மீண்டும் அதைச் செய்வார் என்று நான் நம்புகிறேன்.

kohli century

அவரின் பேட்டிங்கை பார்க்க ஆவலாக காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு இம்முறை நிச்சயம் அவர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் மகிழ வைப்பார் என ராஜ்குமார் சர்மா கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தற்போது பல ஆண்டுகளை கடந்து முதிர்ச்சியான வீரராக மாறியுள்ளார். இன்னும் அவருக்கு கிரிக்கெட்டின் மீதான ஈடுபாடு சற்றும் குறையவில்லை. நிச்சயம் அவர் இந்தத் தொடரில் மீண்டும் பார்முக்கு திரும்பி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி நீங்க இந்த ஒரு விஷயத்துல கொஞ்சம் ஜாக்கரதையா இருங்க – அட்வைஸ் கொடுத்த மான்டி பனேசர்

இந்திய அணியை நீண்ட காலமாக வழிநடத்தி வரும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாகவும் வைத்திருக்கிறார். இந்த அணியை வைத்து அவரால் நிச்சயம் தென்னாப்பிரிக்க தொடரை கைப்பற்ற முடியும் என்றும் ராஜ்குமார் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement