தோனியின் கிரிக்கெட் திர்காலம் குறித்து பேசிய ஐ.பி.எல் சேர்மேன் – விவரம் இதோ

Shukla
- Advertisement -

இந்தியாவின் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் ரசிகர்களை ஒரு அளவில் மட்டுமே மனதில் வைத்து அவர் செயல்படுவார். தனக்கு என்ன சரி என்று படுகிறதோ அதனை கனகச்சிதமாக செய்பவர் அவர். அவ்வாறு தான் சென்ற ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் ரன் அவுட் ஆன பிறகு மனம் உடைந்து போன அவர் அப்போது இருந்து தற்போது வரை கிரிக்கெட்டில் இருந்து தனக்கு விடுப்பு கொடுத்து இருந்து வருகிறார்.

Dhoni

- Advertisement -

இது அவரது பெயரை பிசிசிஐ ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கம் செய்யும் அளவிற்கு சென்றுவிட்டது. ஆனால் ரசிகர்கள் எப்படியாவது இவரை மீண்டும் ப்ளூ ஜெர்சியில் பார்த்துவிட வேண்டும் என்று தவமாய் தவம் கிடக்கின்றனர்.

இந்நிலையில் தோனியின் கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி பேசிய முன்னாள் ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா கூறியதாவது…

dhoni

தோனியிடம் ஆடுவதற்கு இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது . அதை ஆட வேண்டுமா என்று அவர்தான் முடிவு செய்ய வேண்டும். பிசிசிஐயின் கொள்கையின்படி ஒரு வீரருக்கு தனது எதிர்காலத்தை முடிவெடுக்கும் உரிமை நிறையவே உள்ளது. இதனை சுட்டிக் காட்டி தற்போது விடுப்பில் இருக்கிறார். அவர் மீண்டும் ஆட வேண்டுமா? இல்லையா? என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் இவ்வாறு கூறினார் ராஜீவ் சுக்லா.

Advertisement