ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்ட இலங்கை ஜாம்பவான் – வேறலெவல் தான்

rr
- Advertisement -

2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கான பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14 வது ஐபிஎல் சீசனின் மினி ஏலத்தை பிப்ரவரி 18ஆம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இதற்கு முன்னர் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் இருந்து வெளியேற்றப்படும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 20ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ipl trophy

- Advertisement -

அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் அணியின் ஒப்பந்தம் முடிந்து வெளியேறும் வீரர்களின் பட்டியலையும் மோசமாக விளையாடியதால் வெளியேற்றப்படும் வீரர்களையும் அறிவித்திருக்கிறது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட வீரர்கள் அனைவரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் மினி ஏலத்தின் மூலம் மற்ற அணியில் தேர்வு செய்யப்படுவார்கள்.

அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தனது ஒப்பந்த காலம் முடிந்து அணியை விட்டு வெளியேற்றப்பட்டார். ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்மித் கடந்த சில ஐபிஎல் போட்டிகளில் சுமாராக விளையாடி இருப்பதாலும் வெளியேற்றப்பட்டார். இதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

rr

ராஜஸ்தான் அணியில் ஸ்டீவ் ஸ்மித்துடன் சேர்ந்து ஆகாஷ் சிங், அனிருதா ஜோஷி, அங்கித் ராஜ்பூட், ஓஷேன் தாமஸ், ஷாஷாங்க் சிங், டாம் கரன், வருண் ஆரோன் ஆகியோரும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராஜஸ்தான் அணி தங்களது இயக்குனரையும் மாற்றம் செய்திருக்கிறது.

Sangakkara

இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்கக்கார தான் இந்த ஆண்டு ராஜஸ்தான் அணியின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இலங்கை அணியின் முக்கிய ஜாம்பவானான குமார் சங்கக்கார ராஜஸ்தான் அணியை வழிநடத்துவது புதிய நம்பிக்கையைத் தருகிறது. இதனால் ராஜஸ்தான் அணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Advertisement