இந்த ஆண்டு 12ஆவது ஐ.பி.எல் போட்டித்தொடர் 23ஆம் தேதி இன்று மாலை முதல் துவங்க உள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகிவிட்டது. 8 அணி கேப்டன்களும் ஐபில் கோப்பையுடன் போட்டோஷூட்டினையும் முடித்துவிட்டனர். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த ஆண்டு அவர்கள் அணிய உள்ள புதிய ஜெர்ஸியை நேற்று அறிமுகப்படுத்தினர். இந்த புதிய சீருடை பார்ப்பதற்கு கண்ணை கவரும் வண்ணம் உள்ளது.
ஐபில் வரலாற்றில் பிங்க் நிறத்தில் முதல் முறையாக அணியவுள்ள சீருடை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புதிய சீருடை :
Here it is! It’s new, it’s vibrant and it’s Royal Pink! ????
We know you’ve all been waiting for it, Royals! How does it feel, seeing the lads don it for the first time? ???? #HallaBol pic.twitter.com/H6MBBFjxaL
— Rajasthan Royals (@rajasthanroyals) March 22, 2019
பல சிறந்த வீரர்கள் ராஜஸ்தான் அணியில் இருந்தும் அந்த அணி கடந்த தொடரின் போது மிக எளிமையான இலக்கினை கூட எட்ட முடியாமல் பலமுறை தோற்றது. இந்த தொடரிலாவது ராஜஸ்தான் அணி சிறப்பாக ஆடுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.