SRH vs CSK : இன்றைய போட்டியில் தோனி விளையாடாததற்கு இதுதான் காரணம் – ரெய்னா பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 33 ஆவது போட்டி இன்று ஐதராபாத் நகரில் 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமை

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 33 ஆவது போட்டி இன்று ஐதராபாத் நகரில் 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமையிலான சென்னை அணியும் மோதுகின்றன.

Raina

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துவக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டுப்ளிஸிஸ் ஆகியோர் விளையாடி வருகின்றனர். தற்போது 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்களை எடுத்துள்ளது. இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ரெய்னா கேப்டனேசி செய்கிறார்.

இந்நிலையில் தோனி இடம்பெறாதது குறித்து ரெய்னா பேட்டி அளித்தார். அதில் ரெய்னா கூறியதாவது : தோனி நல்ல உடல் நலத்திலேயே உள்ளார். இருப்பினும், தொடர்ச்சியான போட்டிகளால் தோனி தற்போது சிறிது சோர்ந்து உள்ளார். அதற்காக இன்று அவரே விருப்பப்பட்டு ஓய்வினை கேட்டு பெற்றுள்ளார் என்று ரெய்னா தெரிவித்தார்.

Dhoni

மேலும், தோணி தலைமை இல்லாமல் இந்த தொடரில் சென்னை அணி முதன் முதலாக போட்டியை சந்திப்பது குறிப்பிடத்தக்கது. தோனி இல்லாமல் சென்னை அணி சாதிக்குமா ? என்று பொறுத்திருந்து பார்த்தால் தெரியும்.

Advertisement