Suresh Raina : அடித்து துவைக்க உள்ள சின்ன தல. சி.எஸ்.கே அவருக்கு அளித்த பரிசு என்ன தெரியுமா ?

இன்று இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ள போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

Dhoni-1
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 18ஆவது போட்டி இன்று சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோத உள்ளன.

Ashwin

- Advertisement -

இந்த தொடரில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் பலத்தில் சமநிலையில் உள்ளது. இந்த தொடரில் இதுவரை சென்னை அணி 3 வெற்றிகள் மற்றும் 1 தோல்வியுடன் 6 புள்ளிகளில் உள்ளது. அதேபோன்று பஞ்சாப் அணியும் 6 புள்ளிகளில் உள்ளது.

எனவே, இந்த போட்டி இரு அணிக்கும் முக்கியமான போட்டியாகும். இந்த போட்டிக்கு முன்பாக சென்னை அணியின் குட்டி தல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா இதுவரை சென்னை அணிக்காக 5000 ரன்களை அடித்துள்ளார்.

Raina

இதனை கொண்டாடி அவரை சிறப்பிக்கும் விதமாக சென்னை அணியின் உரிமையாளரான ஸ்ரீனிவாசன் ரெய்னாவிற்கு பரிசு ஒன்றினை அளித்தார். பேட் ஒன்றில் வருடாவருடம் அவர் அடித்த ரன்களை பொரித்து அதனை பரிசாக கொடுத்தார்.

- Advertisement -

அந்த பரிசினை தோனி மற்றும் ஸ்ரீனிவாசன் இணைந்து கொடுக்க அதனை ரெய்னா பெற்றுக்கொண்டார். மேலும், எப்போதும் சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடும் அவர் இந்த போட்டியில் அசத்த பயிற்சி எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சிக்கு பிறகு பேசிய ரெய்னா போட்டி எப்படி இருந்தாலும் இன்னைக்கு அதிரடியாக ஆடி ரன்களை குவிப்பேன் என்று கூறினார்.

rainashot

இன்றைய போட்டியில் அஸ்வினா, தோனியா ? யார் வெல்லப்போவது என்று ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்துள்ளனர். சென்னை மைதானத்தில் போட்டி நடைபெறுவதால் சென்னை அணிக்கு பெருமளவில் ஆதரவு இருக்கும் என்பதில் சந்தேமில்லை.

Advertisement