இங்கிலாந்து வானிலையை ஆய்வு செய்த – தமிழ்நாடு வெதர்மேன் ரிப்போர்ட்

Pitch
- Advertisement -

உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின.

ind nz

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 211 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்நிலையில் மழையால் ஆட்டம் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக நேற்று முழுவதும் போட்டி நடைபெறாமல் கைவிடப்பட்டதால் ரிசர்வ் டே ஆன இன்று விளையாட உள்ளது. எந்த இடத்தில் அவர்கள் ஆட்டத்தை கைவிட்டார்களோ அதே இடத்திலிருந்து ஆட்டத்தை தொடருவார்கள். இந்த ஆட்டம் முழுமையாக நடந்தால் இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

Rain-1

மேலும் இந்த போட்டி குறித்து வானிலை ஆய்வு செய்த தமிழ்நாடு வெதர்மேன் ரசிகர்களுக்கு நல்ல அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது : இன்றைய இந்தியா நியூசிலாந்து போட்டி முழுவதும் நடக்கும் அங்கு மழை குறுக்கிட எதுவும் வாய்ப்பில்லை இதை நாங்கள் ஆய்வு செய்து விட்டோம் என்று தனது ரிப்போர்ட்டில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement