எனக்கு சேன்ஸ் கண்டிப்பா கிடைக்கும். அதுவரைக்கும் வெயிட் பண்ணுவேன் – இந்திய வீரர் நம்பிக்கை

Tripathi
- Advertisement -

இந்திய அணியில் தற்போது ஏகப்பட்ட வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருவதன் காரணமாக புது வீரர்களுக்கு அணியில் இடம் கிடைப்பது சிரமமாகவே உள்ளது. ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறப்பான முறையில் தயாராகி வருவதால் குறிப்பிட்ட சில வீரர்களை தவிர்த்து வேறு எந்த புது வீரர்களுக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது.

Bhuvneswar Kumar INDIA

- Advertisement -

ஆனால் ஐபிஎல் தொடரிலும் சரி, உள்ளூர் தொடரிலும் சரி மிகச் சிறப்பாக விளையாடியவரும் ராகுல் திரிப்பாதி இந்திய அணியில் சேர்க்கப்பட வேண்டிய ஒரு வீரர் என்ற பேச்சு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் அணிக்காக டாப் ஆர்டரில் களம் இறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராகுல் திரிப்பாத்திக்கு இதுவரை இந்திய அணியின் பிளேயிங் லெவனனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இருப்பினும் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடர்களில் இந்திய அணியில் ஒரு அங்கமாக இருக்கும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் அவர் ஒரு போட்டியில் கூட இதுவரை இந்திய அணியில் அறிமுகம் ஆகவில்லை. இப்படி தொடர்ச்சியாக அவருக்கு நல்ல பெயர் இருந்தும் அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அவருக்கு அளித்தது.

tripathi

அதோடு தற்போது உலகக்கோப்பை தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்ட வேளையில் அவரது பெயர் இந்த பரிசீலனை பட்டியலில் கூட இடம் பெறவில்லை. இந்நிலையில் எதிர்வரும் தொடர்களில் தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேசிய ராகுல் திரிப்பாதி கூறுகையில் : நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியில் தற்போது நிலையான வீரர்கள் விளையாடுகிறார்கள். கூடிய விரைவில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் அப்படி எனக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நான் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது மட்டுமே தற்போது என் எண்ணமாக உள்ளது. நான் இந்திய அணிக்கு தேர்வாகி எனக்கு வாய்ப்பு கிடைக்கும் வேளையில் நான் விளையாட தயாராக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : ஐசிசி டி20 உ.கோ இந்திய அணியில் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் 4 காராணிகள் – விவரம் இதோ

அதுவரை நான் என்னுடைய நம்பிக்கையை விடாமல் உழைத்துக் கொண்டிருப்பேன். நிச்சயம் எனக்கு கிடைக்கும் வாய்ப்பில் நான் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன் என்று ராகுல் திரிப்பாதி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement