இவருக்கு முன்னாடி என் திறமையை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி – ஆட்டநாயகன் ராகுல் திரிப்பாதி அதிரடி

- Advertisement -

ஐபிஎல் தொடரின் 21 ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கணேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க வீரர் ராகுல் திரிப்பாதி 51 பந்துகளில் 81 ரன்களை குவித்து அசத்தினார். சென்னை அணி சார்பாக பிராவோ 4 ஓவர்கள் வீசி 37 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி முதல் 12 வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீரர் வாட்சன் 50 ரன்களும் அம்பத்தி ராயுடு 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதுவரை சென்னை அணி வெற்றி பெறும் என்றே அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அதன் பிறகு வழக்கம்போல தோனி, சாம்கரன், கேதார் ஜாதவ் என அனைவரும் பேட்டிங்கில் சொதப்ப இறுதியில் ஜடேஜா 8 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்களை இழந்து 157 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ராகுல் திரிப்பாதி தேர்வானார்.

Tripathi

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஆட்ட நாயகன் ராகுல் திரிப்பாதி கூறுகையில் : என்னுடைய கனவு இன்று நிறைவானதாக தோன்றுகிறது. நான் அணியில் எந்த ஒரு இடத்திலும் இறங்கி பேட்டிங் செய்ய தயாராக இருந்தேன். இன்று பந்து பேட்டிற்க்கு வந்ததில் மகிழ்ச்சி. நான் ஸ்கோர் போர்டை அதிகமாக்க நினைத்தே விளையாடினேன். அதேபோன்று என்னுடைய இன்றைய போட்டியில் என்னுடைய ஷாட்டுக்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தன.

tripathi 1

இந்த பயணம் ஒரு அருமையான பயணம். எனக்கு கே கே ஆர் அணி எப்போதும் ஒரு ஸ்பெஷலான டீம்தான். அதிலும் குறிப்பாக ஷாருக்கான் சார் முன்னிலையில் நான் விளையாடிய விதம் சிறப்பானது என்னுடைய கனவு நிறைவேறியது என்று ராகுல் திரிப்பாதி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement