நினைத்தபடியே பஞ்சாப் அணியில் மாற்றத்தை கொண்டு வந்த ராகுல் – விவரம் இதோ

Rahul
- Advertisement -

இந்த வருட ஐ.பி.எல் தொடரில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பெரிய அளவில் சாதிக்கும் என்று நம்பிக்கை வைத்த அணிகளில் ஒன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப். ஆனால் இந்த ஆண்டு அவர்களுக்கு மிக மோசமான ஆண்டாகவே அமைந்துள்ளது. புதிய கேப்டனாக ராகுல், புதிய பயிற்சியாளராக கும்ப்ளே ஆகியோர் தலைமையில் சிறப்பாக விளையாடும் என்று கருதப்பட்ட அணி பஞ்சாப்.

kxipvsrcb

- Advertisement -

ஆனால் நடப்பு ஐ.பி.எல் தொடரில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த அணி 7 போட்டிகளில் 6 போட்டியில் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடும் போட்டியில் பஞ்சாப் அணி ஒருவேளை தோற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முற்றிலும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

இந்நிலையில் தற்போது விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் அணிக்கும் இடையேயான 31 ஆவது லீக் போட்டி சார்ஜா மைதானத்தில் தற்போது துவங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது பெங்களூரு அணி விளையாடி வருகிறது.

gayle

இந்த போட்டியில் பஞ்சாப் அணிக்காக கெயில் களம் இறங்குவார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த வேளையில் முக்கிய மாற்றமாக கிரிஸ் கெயிலை அணிக்குள் கொண்டு வந்துள்ளார் ராகுல். இந்த போட்டியின் துவக்க வீரராக ராகுலுடன் கெயில் விளையாட உள்ளார் .மூன்றாம் இடத்திற்கு அகர்வால் பின் தள்ளப்பட்டுள்ளார்.

Maxwell

அதுமட்டுமன்றி பவர் ஹிட்டர்களான பூரன் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரும் அணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் பஞ்சாப் அணியும் இன்னும் ஒரு வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கும் என்ற நிலையில் பெங்களூர் அணியும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement