இந்த ஒரு போட்டியின் வெற்றிக்கு பிறகு எனக்கு தூக்கமே வரவில்லை – ராகுல் ஓபன் டாக்

Rahul
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 38 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஐயர் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்தது.

DCvsKXIP

அதிகபட்சமாக தொடக்க வீரர் ஷிகர் தவான் 61 பந்துகளில் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரை தவிர மற்ற யாரும் 15 ரன்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

- Advertisement -

பஞ்சாப் அணி சார்பாக நிக்கலஸ் பூரன் 53 ரன்களையும், மேக்ஸ்வெல் 32 ரன்களை குவித்தனர். இறுதியில் தீபக் ஹூடா மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பஞ்சாப் அணி கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

dc

இந்நிலையில் இந்த போட்டியின் வெற்றிக்கு பிறகு பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் கூறுகையில் : தான் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பிறகு தூங்கவே இல்லை தூக்கமே வரவில்லை என்று கூறியிருந்தார். அதற்கு காரணம் யாதெனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரு சூப்பர் ஓவர்களுக்குப் பின் வெற்றி கிடைத்ததால் எனக்கு தூக்கம் வர நீண்ட நேரம் ஆனது.

Gayle

இவ்வளவு போராட்டத்திற்க்கு பிறகு ஜெயிச்சிருக்க கூடாது. சூப்பர் ஓவருக்கு முன்பாக எவ்வாறு போட்டியை முடித்திருக்க வேண்டும் என்ற நினைப்பு ஓடிக்கொண்டே இருந்தது. அது மட்டுமின்றி அந்த போட்டியின் வெற்றி மிகப்பெரியது அதைவிட இந்த போட்டியில் முக்கியமானது என தான் நினைப்பதாக ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement