அப்பா இழந்த சோகத்திலும் அரைசதம் அடித்த பஞ்சாப் வீரர். மைதானத்திற்குள் வந்து பாராட்டிய ராகுல் – நெகிழவைத்த தருணம்

Mandeep-1
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 46 வது லீக் போட்டியில் நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

KXIPvsKKR

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் கில் 57 ரன்களையும் கேப்டன் இயான் மோர்கன் 40 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும், ஜோர்டான் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 150 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 150 குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் மந்தீப் சிங் 66 ரன்களையும், கெயில் 51 ரன்களையும் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் மன்தீப் சிங் அரைசதம் கடந்ததும் டக் அவுட்டில் இருந்த ராகுல் மைதானத்திற்குள் வந்து அவருக்கு வாழ்த்துக்களை கூறினார்.

mandeep

இந்நிலையில் போட்டி முடிந்து துவக்க வீரர் மந்தீப் சிங் ஆட்டம் குறித்து பேசிய ராகுல் கூறுகையில் : மந்தீப் சிங் இது போன்ற கடினமான சூழ்நிலைகளிலும் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி உள்ளார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்தது அவர் தற்போது ஒரு கடினமான நாட்களை எதிர் கொண்டு இருக்கிறார்.

Mandeep 1

அவரது அப்பா இறந்த சில நாட்களிலேயே இப்படி ஒரு ஆட்டத்தை அவர் விளையாடி எங்கள் அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததுள்ளார். எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இவரை நினைத்து நிச்சயம் அவருடைய குடும்பம் பெருமைப்படும் அதுமட்டுமின்றி அவரது இந்த சிறப்பான ஆட்டம் அவர் தந்தையும் பெருமைப்படுத்தும் என்று உருக்கமான வார்த்தைகளை நெகிழ்ச்சியாக கூறினார் ராகுல்.

Advertisement