2 ஆவது சூப்பர் ஓவரை ரவி பிஷ்னாய்க்கு ரோஹித் சர்மா குடுக்க காரணம் இதுதானா? – ராகுல் டிராவிட் கொடுத்த விளக்கம்

Dravid
- Advertisement -

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியானது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. ஏனெனில் இந்த போட்டியில் விளையாடிய இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் என இரண்டு அணிகளும் சேர்ந்து 424 ரன்கள் குவித்தது. அதுமட்டுமின்றி ஒரு சூப்பர் ஓவருக்கு இரண்டு சூப்பர் ஓவர்களாக நடைபெற்று மிகவும் திரில்லிங்காக இந்த போட்டி முடிவுக்கு வந்தது.

அந்த வகையில் முதல் சூப்பர் ஓவரின் போது இரு அணிகளுமே 16 ரன்களை எடுத்ததால் இரண்டாவது சூப்பர் ஓவருக்கு போட்டி நகர்ந்தது. அந்த நேரத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 11 ரன்களை மட்டுமே எடுக்க 12 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

அப்போது முதல் சூப்பர் ஓவரை ஏற்கனவே முகேஷ் குமார் வீசிவிட்டார் என்பதனால் இரண்டாவது சூப்பர் ஓவரை ஆவேஷ் கான் தான் வீசுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த நேரத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்தினை ரவி பிஷ்னாயிடம் கொடுத்தார்.

அப்படி ரோகித் வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக முதல் மூன்று பந்திகளிலேயே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய பிஷ்னாய் நமது அணிக்கு வெற்றியையும் பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில் நேற்றைய இரண்டாவது சூப்பர் ஓவரின் போது ரவி பிஷ்னாயை ரோகித் சர்மா அழைக்க என்ன காரணம்? என்பது குறித்து போட்டி முடிந்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : ரோகித் நேற்று ஒரு கேப்டனாக அவருடைய தைரியத்தை நம்பி தான் அந்த முடிவை எடுத்தார். நிச்சயம் இந்த 11 ரன்கள் என்பது பெரிய ஸ்கோர் கிடையாது என்றாலும் சுழற்பந்து வீச்சாளரால் விக்கெட்டுகளை எடுக்க முடியும் என்று ரோகித் சர்மா நினைத்து தைரியமாக இந்த முடிவை எடுத்திருக்கிறார். அதேபோன்று ரவி பிஷ்னாய் பேங்க் ஆப் லென்த்தில் இரண்டு சிறப்பான பந்துகளை வீசினார்.

இதையும் படிங்க : கடைசி ஓவரில் மட்டும் 36 ரன்ஸ்.. ரோஹித் – ரிங்கு சரவெடியால் இந்தியா 2 தனித்துவமான உலக சாதனை

ஒருவேளை அவர் கொஞ்சம் மேலே பந்தினை வீசி இருந்தால் கூட இரண்டு பந்துகளும் சிக்சருக்கு போயிருக்கும். ஆனால் ரவி பிஷ்னாய் கேப்டன் கொடுத்த நம்பிக்கையால் தைரியமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதே போன்று ரோகித் சர்மாவும் இக்கட்டான நேரத்தில் நிச்சயம் சுழற்பந்து வீச்சாளரால் போட்டியை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் எடுத்த அந்த தைரியமான முடிவு நமக்கு இறுதியில் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது என டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement