ஹாட்ரிக் சாதனை பண்ணிருக்கோம்.. எனக்காக யாரும் எவரஸ்ட் எற வேண்டாம்.. இந்திய அணிக்கு டிராவிட் கோரிக்கை

Rahul Dravid
- Advertisement -

இந்தியா – தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. அப்போட்டி ஜூன் 29ஆம் தேதி பார்படாஸ் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. இந்த 2 அணிகளுமே இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. எனவே ஃபைனலில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்புக்கு காணப்படுகிறது.

முன்னதாக இத்தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக ஜாம்பவான் ராகுல் டிராவிட் விடை பெற உள்ளார். ஒரு வீரராக சச்சினுக்கு நிகராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தலா 10000 ரன்கள் அடித்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். இருப்பினும் ஜாம்பவானாக போற்றப்படும் அவர் தன்னுடைய கேரியரில் ஒருமுறை கூட உலகக் கோப்பையை வென்றதில்லை.

- Advertisement -

டிராவிட் கோரிக்கை:
அதனால் 2011இல் சச்சின் போல இம்முறை ட்ராவிட்டுக்காக இந்த உலகக் கோப்பையை வெல்லுங்கள் என்று சேவாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். எனவே இந்த உலகக் கோப்பையை வென்று ராகுல் டிராவிட்டை வெற்றியுடன் வழியனுப்ப இந்திய அணி தயாராகியுள்ளது. இந்நிலையில் தமக்காக கோப்பையை வெல்வதை விட நாட்டுக்காக இந்திய அணியினர் சாம்பியன் பட்டம் வெல்வதையே தாம் விரும்புவதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரே வருடத்துக்குள் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை ஆகிய 3 விதமான ஐசிசி தொடரின் ஃபைனலுக்கு தொடர்ச்சியாக இந்தியா தகுதி பெற்று சாதனை படைத்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு நபராக நான் யார் என்பதற்கு இது முற்றிலும் எதிரானது. எனது மதிப்புகளுக்கு அது முற்றிலும் எதிரானது. யாராவது ட்ராவிட்டுக்காக இதை செய்யுங்கள் என்று சொன்னால் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை”

- Advertisement -

“யாரோ ஒருவரிடம் நீங்கள் ஏன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற விரும்புகிறீர்கள்? என்று கேட்டால் எவரெஸ்ட் சிகரம் அங்கே இருப்பதாலேயே நான் ஏற விரும்புகிறேன் என்று சொல்வார். அந்த வகையில் நாம் ஏன் இந்த உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறோம்? அது அங்கு இருப்பதாலேயே நாம் வெல்ல விரும்புகிறோம். எனவே இது யாருக்காகவும் கிடையாது. அங்கே வெற்றி இருக்கிறது”

இதையும் படிங்க: இதை செஞ்சா ஃபைனலில் இந்தியாவை மண்ணை கவ்வ வைக்கலாம்.. தெ.ஆ அணிக்கு பாண்டிங் ஆலோசனை

“அதைப் பெறுவதற்கு நாம் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும். எனவே ஒருவருக்காக இதை செய்யுங்கள் என்று சொல்வதற்கு நான் எதிரானவன். அதை நம்பவும் இல்லை விவாதிக்கவும் இல்லை. எனவே அந்தப் பிரச்சாரத்தை நீக்கி விட்டால் அதை பாராட்டுவேன். ஒரே வருடத்தில் நாங்கள் 3 வகையான ஃபைனலுக்கும் தகுதி பெற்றுள்ளோம். அதற்கான பாராட்டுக்கள் வீரர்களை சேரும். இம்முறை நாங்கள் சிறப்பாக விளையாடினால் கண்டிப்பாக வெல்வோம்” என்று கூறினார்.

Advertisement