ராகுல் மற்றும் ராயுடு அதிரடி காட்டுவதற்கு…இவர்தான் காரணம், யார் தெரியுமா – புகைப்படம் உள்ளே

srikanth
- Advertisement -

பஞ்சாப் அணியில் உள்ள கே எல் ராகுலும் , சென்னை அணியில் ஆடிவரும் அம்பத்தி ராயுடுவும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி வருகின்றனர் என்றும் இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சர்வதேச டி20 தொடர்களில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இறக்கி விட்டால் சிறப்பாக ஆடுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வதிகாரியாக இருந்த ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.26 வயதாகவும் கே எல்.ராகுல் தற்போது நடந்து வரும் இந்த ஐபிஎல் தொடரில் 236 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்த பேட்ஸ்மேன் வரிசையில் 2 ஆம் இடத்தில் உள்ளார்.

Rahul1

இதுவரை நடந்த 6 போட்டிகளில் 180.15 ஸ்ட்ரைக் ரோட்டில் இருக்கிறார் கே .எல் ராகுல்.மேலும் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் கோலி யையே இந்த சீசனில் மிஞ்சி விட்டார் ராகுல்.இவருக்கு அடுத்த படியாக சென்னை அணியில் ஆடிவரும் அம்பத்தி ராயுடுவும் சிறப்பான ஆட்டத்தை ஆடிவருகிறார்.இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 201 ரன்களை குவித்து 160.80 ஸ்ட்ரைக் ரோட்டில் உள்ளார் . இதுவரை 184 டி20 போட்டிகளை ஆடியுள்ளார் அம்பத்தி ராயுடு.

- Advertisement -

மேலும் இவர்கள் இருவருமே நடக்க இருக்கும் சர்வதேச டி20 தொடர்களில் ஆடுவதற்கு நல்ல தேர்வாக இருப்பார்கள் என்றும், இவர்கள் இருவருமே ஒருவர் ஓப்பனிங் பிளேயராகவும் மற்றொருவர் 4 வது பேட்டிங் ஆர்டரில் இறங்க நல்ல தேர்வாக இருப்பார்கள் என்றும் ஸ்ரீகாந்த தெரிவித்துள்ளார்.

SRIKKANTH

மேலும் சென்னை அணியில் ஆடி வரும் அம்பத்தி ராயுடு பல இக்கட்டான தருணங்களில் சென்னை அணியின் வெற்றிக்கு உதவி வருகிறார் என்றும் , அதே போன்று பஞ்சாப் அணியின் கே எல் ராகுல் 14 பந்திகளில் அரை சதம் அடித்தது எல்லாம் அற்புதமான விஷயம் என்றும் , விக்கெட் கீபரக இருந்து கொண்டு பெட்டிங்கிலும் சிறப்பாக ஆடுவது என்பது சிறந்த விஷயம் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement