ஈஸியா ஜெயிக்க வேண்டிய இந்த மேட்ச் கடைசி வர செல்ல நான் செய்த இந்த தவறே காரணம் – ஒப்புக்கொண்ட ராகுல்

Rahul
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் நடந்த நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 221 ரன்கள் அடிக்க, 222 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 217 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி கடைசி பந்து வரை இரு அணிகளுக்கும் சம வாய்ப்போடு சென்றதால் போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.

rrvspbks

- Advertisement -

இந்நிலையில் இந்தப் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேசுகையில் : நான் எப்பொழுதும் எங்கள் அணியின் வீரர்களை நம்புவதை நிறுத்துவதில்லை. நிச்சயம் எங்களுக்கு தெரியும் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தால் நாங்கள் ஆட்டத்திற்கு திரும்பி விடுவோம் என்று நினைத்தேன். முதல் 11 – 12 ஓவர்கள் நாங்கள் சிறப்பாகவே பந்து வீசினோம்.

அதன்பிறகு போட்டி டைட்டாக சென்றது. இறுதியில் நாங்கள் ஒரு அணியாக வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இந்த போட்டியில் எங்களது பேட்ஸ்மேன்களும் சரி பந்து வீச்சாளர்களும் சரி தேவையான நேரத்தில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். எங்கள் அணியில் மிகவும் திறமை வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். அவர்களை நாங்கள் அணியில் தேர்வு செய்து விளையாட வைத்து வருகிறோம்.

Hooda-2

இந்த போட்டியில் தீபக் ஹூடாவின் இன்னிங்ஸ் அற்புதமான ஒன்றாக இருந்தது. இதுபோன்ற பயமற்ற ஆட்டத்தை பார்க்கவே விரும்புகிறேன். ஐபிஎல் தொடரும் இதுபோன்ற பயமற்ற இன்னிங்ஸ்களுக்கான ஒரு தொடர் தான். இந்த போட்டியில் கெயில் மற்றும் ஹூடா ஆகியோர் விளையாடிய விதம் அதனை வெளிக்காட்டியது. இந்த தொடரின் முதல் போட்டியிலேயே எங்களுக்கு வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

samson

இந்த பேட்டியின் போது வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் இந்த போட்டி இறுதி வரை செல்ல நானும் ஒரு காரணம் என்று குறிப்பிட்டு பேசினார். அதற்கு காரணம் யாதெனில் 12 ரன்களில் இருந்த போது சாம்சன் கொடுத்த எளிமையான கேட்சை ராகுல் தவறவிட்டார். சாம்சன் 12 ரன்களில் பெற்ற வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி 119 ரன்கள் குவித்தார். ஒருவேளை சாம்சன் கொடுத்த கேட்சை முன்கூட்டியே ராகுல் பிடித்திருந்தால் போட்டி எப்போதோ முடிந்து இருக்கும் என்பதால் தான் செய்தது தவறு என்பதை ராகுல் ஒப்புக் கொண்டு அதை பரிசளிப்பு விழாவின் போது கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement