MI vs RR : வெற்றி நல்லது தான். ஆனால் மும்பை அணியுடனான வெற்றி மகிழ்ச்சி இல்லை – ரஹானே பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 27 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ரஹானே தலைமையிலான

Rahane
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 27 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

Rahane 1

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக டி காக் 52 பந்துகளில் 81 ரன்களை குவித்தார். ரோஹித் 47 ரன்களை அடித்தார். பிறகு 118 ரன்கள் இலக்காக ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை குவித்தது. இதனால் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி சார்பாக ஜாஸ் பட்லர் 43 பந்துகளில் 89 ரன்களை குவித்தார். இதில் 7 சிக்ஸர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும். ஆட்டநாயகனாக பட்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Buttler

போட்டி முடிந்து வெற்றி குறித்து ரஹானே பேசுகையில் கூறியதாவது : இந்த வெற்றி அருமையானது தான். ஆனால், நான் முழு மகிழ்ச்சி அடையவில்லை. ஏனெனில், 30 பந்துகளுக்கு 30 ரன்கள் தேவை என்ற நிலையில் இருக்கும்போது எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், கஷ்டப்பட்டே வெற்றியை அடைந்தோம்.

Buttler 1

பட்லர் பிரமாதமாக ஆடினார். இந்த மைதானத்தில் எப்போதுமே விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும், கடந்த சில போட்டிகளில் நடந்த தவறுகளை திருத்தி வருகிறோம். நடுவரிசை பேட்டிங்கில் வலுவினை சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறன் என்று ரஹானே கூறினார்.

Advertisement