இவரின் வருகை எங்கள் அணிக்கு கூடுதல் பலத்தை அளித்திருக்கிறது – ரஹானே பேட்டி

Rahane
- Advertisement -

இந்த வருடம் 12 ஆவது ஐ.பி.எல் போட்டிகள் நாளை மாலை சென்னையில் துவங்குகிறது. நாளை மாலை நடக்கும் முதல் போட்டியில் சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Ipl cup

- Advertisement -

நாளை மாலை தொடங்கவிருக்கும் சென்னை மற்றும் பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியின் எதிர்பார்ப்பு இன்றிலிருந்தே அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்தார்.

அதில் ரஹானே கூறியதாவது : எங்கள் அணி கடந்த தொடரில் பலமுறை வெற்றிக்கு அருகில் சென்று வெற்றியை தவறிவிட்டது. இந்தமுறை அதனை சரிப்படுத்தி வெற்றியை அடைய நாங்கள் உழைத்து வருகிறோம். இந்தமுறை எங்கள் அணி சரியான கலவையில் உள்ளது. மேலும், தாடையில் இருந்து மீண்டு வந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அணியில் இணைந்திருப்பது மகிழ்ச்சி.

Smith

அவரின் வருகை அணிக்கு மேலும் பலத்தை தரும். அவரின் ஆட்டம் அணிக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும், அவர் ஒரு உலகதரமான வீரர் என்பதில் சந்தேகமில்லை. இந்தமுறை எங்களது அணி நிச்சயம் தொடரை கைப்பற்ற முயற்சிக்கும் என்று தெரிவித்தார் ராஜஸ்தான் கேப்டன் ரஹானே.

Advertisement