டி20 க்கு செட் ஆகமாட்டார்னு இந்தியன் டீம்ல சொன்ன இவரு ஒருத்தர்தான் யூ.ஏ.இ ல 2 அரைசதம் அடிச்சிருக்காரு – விவரம் இதோ

- Advertisement -

நான்கு மாத பெரும் பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது ஐபிஎல் தொடர் நடப்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் தொடர் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது அதன் பின்னர் கொரோனா தாக்கம் அதிகமாகி கொண்டே இருந்ததால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

Ipl cup

- Advertisement -

இந்த தருணத்தில் வைரசின் தாக்கம் குறைவாக இருந்த ஐக்கிய அரபு அமீரகம், நியூசிலாந்து, இலங்கை போன்ற நாடுகளில் தொடரை நடத்தி தருவதாக பிசிசிஐக்கு அழைப்பு விடுத்தது. மேலும் ஐபிஎல் தொடரை நடத்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தை தேர்ந்தெடுக்க பிசிசிஐ முடிவு செய்திருந்தது.

ஆனால் அந்த காலகட்டத்தில் டி20 உலக கோப்பை தொடர் நடக்க இருப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று ஐசிசி அந்த உலகக் கோப்பை தொடரை அடுத்த வருடத்திற்கு தள்ளி வைத்தது இதன் காரணமாக இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி விடலாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

ipl

இதுகுறித்து ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படெல் கூறுகையில்… முழு ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வாய்ப்பு இருக்கிறது மொத்தம் 60 போட்டிகளையும் அங்கு நடத்திவிடலாம் என்று தான் யோசித்து முடிவுசெய்துள்ளோம். இத்தொடர் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 7 வரை நடத்த திட்டமிட்டுள்ளோம். அங்கு நடத்தினால் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்தி முடிக்கமுடியும்.

- Advertisement -

எங்கு நடக்கும் ? எப்போது நடக்கும் ? வீரர்களை எப்படி பாதுகாப்பது ? போட்டிகளுக்கான அட்டவணை என்பது குறித்த இன்னும் தெளிவான தகவல்கள் 7 நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று கூறியிருந்தார் பிரிஜேஷ் படெல்.

CskvsMi

இந்நிலையில் தற்போது வெளியான அதிகாரபூர்வ தகவலின்படி ஐ.பி.எல் 2020 சீசன் : செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கி நவம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதியாகியுள்ளது. மேலும் இறுதிப்போட்டி மட்டும் 8 அல்லது 10 தேதிகளில் எதாவது ஒரு தேதியில் நடத்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஏற்கனவே ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்ற போது ஐபிஎல் தொடரின் முதல் 20 போட்டிகள் யூ.ஏ.இ யில் நடைபெற்றன. அப்படி அங்கு நடைபெற்ற அந்த தொடரில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே 2 இரட்டை சதங்களை அடித்துள்ளார். மேலும் அதிக பட்சமாக 72 குவித்துள்ள அந்த வீரர் வேறுயாருமில்லை.

Rahane

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 செவடிவத்திற்கு செட்டாக மாட்டார் என்று நீக்கப்பட்ட ரஹானே தான். ரஹானே இந்திய அணியில் மெதுவாக விளையாடும் காரணத்தினால் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் இருந்து நீக்கப்பட்டு தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டும் துணை கேப்டனாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement