நாளைக்கு அவர் இந்திய அணிக்காக முதல் போட்டியில் அறிமுக வீரராக விளையாடுவாரு – கேப்டன் ரஹானே உறுதி

rahane
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை கான்பூர் மைதானத்தில் துவங்குகிறது. இந்த தொடரில் ஏற்கனவே சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, பும்ரா, ரிஷப் பண்ட், முகமது ஷமி ஆகியோருக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களை தவிர்த்து முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் ஓய்வில் உள்ளார்.

அதேவேளையில் கே.எல்.ராகுலும் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நேற்று திடீரென இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். இதன்காரணமாக நாளைய முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் ? என்பதைக்கான அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நாளைய போட்டியில் இந்திய அணிக்காக அறிமுக வீரராக இளம் வீரர் ஒருவர் நிச்சயம் இடம் பெறுவார் என்று இந்திய அணியின் கேப்டன் ரஹானே உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

iyer

நாளைய இந்திய அணிக்கான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் இந்திய அணிக்காக அறிமுக வீரராக விளையாடுகிறார் என்பதை உறுதி செய்தார். இதன் மூலம் ஏற்கனவே இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடி இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக அவர் அறிமுகமாக இருக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : அவரு என்ன தப்பு பண்ணாரு. டெஸ்ட் அணியில் ஏன் அவரை சேக்கல – அஜய் ஜடேஜா கோபம்

மேலும் ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோர் இந்த தொடரில் விளையாடாததால் அவர்களுக்கு பதிலாக சுப்மன் கில் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்பதும் உறுதியாகியுள்ளது.

Advertisement