ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமில்ல இன்னொரு வீரரும் இன்னைக்கு அறிமுகமாகி இருக்காரு – யார் அவர் தெரியுமா?

INDvsNZ
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று கான்பூர் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது இந்திய அணி உணவு இடைவேளை வரை 82 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து சிறப்பாக விளையாடி வருகிறது.

gill

- Advertisement -

முதல் விக்கெட்டாக மாயங்க் அகர்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் சுப்மன் கில் 52 ரன்களுடனும், சத்தீஷ்வர் புஜாரா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே பேட்டிங் தேர்வு செய்யும்போது இந்த போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவதாக அறிவித்தார்.

இந்த விடயம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இதே போட்டியில் மற்றொரு வீரரும் அறிமுக வீரராக விளையாடி வருகிறார். அந்த வீரர் யாரெனில் நியூசிலாந்து அணியை சேர்ந்த 22 வயதான இளம் ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா தான்.

rachin

இந்த ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 6 போட்டிகளில் 54 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக நடைபெற்ற டி20 தொடரில் கூட இவர் இந்திய அணிக்கு எதிராக விளையாடி இருந்தார். இந்நிலையில் ஆல்ரவுண்டரான இவருக்கு இன்றைய போட்டியில் அறிமுக வீரராக விளையாட நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் வாய்ப்பு அளித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : 12 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு வந்த பிரபல பங்களாதேஷ் வீரர் – ஓய்வு அறிவிப்பு

அதனால் இன்றைய போட்டியில் ஒரு வீரர் மட்டுமல்ல இரண்டு வீரர்கள் அறிமுக வீரர்களாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை முதல் இன்னிங்சில் 2 ஓவர்கள் வீசியுள்ள ரச்சின் ரவீந்திரா 2 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். ஏற்கனவே இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட தேர்வு ஆகியிருந்த ரவீந்திரா பயிற்சி போட்டியில் விளையாடி இருந்தாரே தவிர முதன்மை அணியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement