தொடர்நாயகன் விருதை வென்றதில் மகிழ்ச்சி.. ஆனா இந்த விஷயத்தை நெனச்சா கஷ்டமா இருக்கு – ரச்சின் ரவீந்திரா

Rachin
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டியானது கடந்த மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா தலைமைதான இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்த விடயம் எனக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது : ரச்சின் ரவீந்திரா

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணியாயானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக டேரல் மிட்சல் 63 ரன்களையும், மைக்கேல் பிரேஸ்வெல் 53 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 49 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 254 குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா 76 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களையும் குவித்தனர்.

இந்நிலையில் இந்த தொடரின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூஸிலாந்து அணியின் துவக்க வீரரான ரச்சின் ரவீந்திரா 4 போட்டிகளில் விளையாடி 263 ரன்கள் குவித்து இந்த தொடரின் தொடர் நாயகன் விருதினை வென்று அசத்தியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் அவர் செயல்பட்ட விதம் குறித்து பேசுகையில் அவர் கூறியதாவது : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் தோல்வியடைந்ததை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த தொடரில் விளையாடியதில் உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் டாப் 10-ல் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள் – பக்கா மாஸ்

நியூசிலாந்து அணியில் இடம் பெற்று விளையாடுவதை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது என்றும் இந்த தொடரின் தொடர் நாயகன் விருதினை வென்றதை விட இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்ள வருத்தமாக இருப்பதாக ரச்சின் ரவீந்திரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement