முதல்முறை எனக்கு ஒன்னும் தெரியல. ஆனால் இந்த முறை விடமாட்டேன் – சவால் விட்ட ரபாடா

Rabada
- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரை வெற்றிகரமாக முடித்து அடுத்த தொடருக்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

Rabada

- Advertisement -

இந்நிலையில் அந்த அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான ரபாடா இந்திய அணி உடனான இந்த தொடர் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது அந்த மைதானம் சற்று சவாலாக இருந்தது. இருந்தாலும் அந்த மைதானத்தில் நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம்.

அதற்கடுத்து தற்போது இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள நாங்கள் இந்தியாவிலும் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். மேலும் இந்திய மைதானங்களில் முதன்முறை நான் விளையாடும் போது எப்படி விளையாடுவது என்று தெரியாமல் இருந்தது. ஆனால் அதற்கு அடுத்து சில ஆட்டங்களில் நான் இந்தியாவில் விளையாடி உள்ளேன்.

rabada

மேலும் ஐபிஎல் தொடரிலும் நான் பங்கேற்று உள்ளதால் இந்த முறை இந்திய மைதானங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்ற அனைத்தும் எனக்குத்தெரிந்து உள்ளது. எனவே இந்தமுறை சூழ்நிலையை புரிந்து நான் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுப்பேன் இந்தத் தொடரில் தென்ஆப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் என்றும் ரபாடா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement