இப்டியா டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுவிங்க, இந்தியாவின் தோல்விக்கு காரணமான தோனியை திட்டிய சாஸ்திரி – பின்னணியை பகிர்ந்த ஸ்ரீதர்

- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி 3 விதமான உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாகவும் கண்ணிமைக்கும் நேரத்தில் விக்கெட் கீப்பிங் செய்வதில் புதிய பரிணாமத்தையும் ஏற்படுத்தி வரலாறு கண்ட மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக சாதனை படைத்து ஓய்வு பெற்றார். மேலும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற இன்றைய இந்திய அணியில் விளையாடும் வீரர்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி மிகச் சிறந்த தலைவனுக்கு எடுத்துக்காட்டாகவும் திகழும் அவர் வரலாற்றின் மிகச் சிறந்த பினிஷர்களில் ஒருவராகவும் போற்றப்படுகிறார்.

ஆரம்ப காலங்களில் டாப் ஆடரில் விளையாடிய அவர் கேப்டனாக பொறுப்பேற்றதும் அணியின் நலனுக்காக தனது இடத்தை விராட் கோலி போன்ற வீரர்களுக்கு விட்டுக்கொடுத்து மிடில் ஆர்டரில் விளையாடினார். குறிப்பாக டாப் ஆர்டர் சரிந்த நிறைய போட்டிகளில் நங்கூரமாக நின்று கடைசி வரை போட்டியை எடுத்துச் சென்று கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய அவர் 2011 உலக கோப்பை பைனல் நிறைய மறக்க முடியாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

திட்டிய சாஸ்திரி:
அதனாலேயே மிகச் சிறந்த பினிஷர் என்று ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களால் போற்றப்படும் அவர் “யானைக்கும் அடி சறுக்கும்” என்ற வகையில் சில தருணங்களில் சொதப்பலாகவும் செயல்பட்டு தோல்விக்கு காரணமாகவும் அமைந்துள்ளார். அதன் காரணமாக இப்போதும் ஒரு தரப்பு ரசிகர்கள் தோனியை டெஸ்ட் பிளேயர் என்று கலாய்ப்பது வழக்கமாகும். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்திய அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்றது.

Dhoni 1அதற்கு வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் 323 ரன்களை துரத்தும் போது டாப் ஆர்டர் சரிந்த நிலையில் களத்தில் நின்ற தோனி 66 பந்துகளில் 133 ரன்கள் தேவைப்பட்ட போது அதிரடி காட்டாமல் 37 (59) ரன்கள் எடுத்து மெதுவாக விளையாடி 47வது ஓவரில் அவுட்டானது தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதனால் கடுப்பான அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மெதுவாக விளையாடியதற்காக தோனியை மறைமுகமாக திட்டியதாக அப்போதைய பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் கூறியுள்ளார். இது பற்றி தனது சுயசரிதை புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு.

“விராட் கோலி – சுரேஷ் ரெய்னா ஆகியோர் பேட்டிங் செய்யும் வரை நாங்கள் வெற்றியை நோக்கி நடந்தோம். ஆனால் அதன் பின் விக்கெட்டுகளை இழந்த போது களத்தில் நின்ற தோனிக்கு கடைசி 10 ஓவரில் எதிர்ப்புறம் பேட்ஸ்மேன்கள் இல்லாமல் பந்து வீச்சாளர்கள் எனப்படும் டெயில் எண்டர்கள் மட்டுமே கைகொடுக்க காத்திருந்தனர். அதனால் அந்த சமயத்தில் அவர் அதிரடியாக விளையாடுவதை நிறுத்தி விட்டார். குறிப்பாக கடைசி 10 ஓவரில் ஓவருக்கு 13 ரன்ரேட் தேவைப்பட்ட போது நாங்கள் அடுத்த 5 – 6 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தோம். அந்த இன்னிங்ஸில் தான் தோனியும் ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் கடந்தார்”

- Advertisement -

“அதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாலும் அவர் இலக்கை சேசிங் செய்வதற்கு கொஞ்சமும் முயற்சிக்கவில்லை. அதனால் 86 ரன்கள் வித்தியாசத்தில் கொஞ்சமும் போராடாமல் தோற்றதால் ரவி சாஸ்திரி கோபமடைந்தார். ஏனெனில் நாங்கள் கொஞ்சமும் எதிரணிக்கு அச்சுறுத்தலை கொடுக்காமல் தோற்றோம். அதைத்தொடர்ந்து நடைபெற்ற 3வது போட்டிக்கு முன்பாக நடந்த அணி மீட்டிங்கில் “நீங்கள் யாராக இருந்தாலும் அடுத்த போட்டியில் இது போன்ற நிலைமையில் வெற்றிக்கு போராடாமல் விளையாடக்கூடாது”

இதையும் படிங்க: நான் எதிர்கொண்டதிலேயே கடினமான பவுலர்னா அது இவர்தான் – இந்திய வீரர் புஜாரா கருத்து

“அப்படி விளையாடினால் அதுவே எனது தலைமையில் அவர்கள் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும். நீங்கள் போட்டியில் தோற்பது தவறில்லை ஆனால் போராடாமல் தோற்பது அசிங்கமாகும்” என்று சரமாரியாக திட்டினார். அந்த இடத்தில் தோனியும் இருந்தார். அப்போது ரவி சாஸ்திரியின் வார்த்தைகள் மொத்த அணிக்கானது என்றாலும் அவரை தோனி தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்குமிங்கும் பார்க்காமல் நேராக ரவி சாஸ்திரியை பார்த்த அவர் அந்த வார்த்தைகளை ஏற்றுக் கொண்டார். ஏனெனில் அது போன்ற நேரங்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வைப்பது அவரது திறமைகளில் ஒன்றாகும்” என்று கூறினார்.

Advertisement