முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவது கன்பார்ம். அதுல மாற்றமே இல்ல – து.கேப்டன் புஜாரா பேட்டி

Pujara
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த 3 போட்டிகள் கொண்ட தொடரினை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நாளை மறுதினம் கான்பூர் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான முதல் போட்டியில் விராட் கோலி ஓய்வில் இருப்பதன் காரணமாக ரஹானே கேப்டனாக செயல்படவுள்ளார்.

wtc ind

- Advertisement -

அதேவேளையில் இரண்டாவது போட்டியின்போது அணியுடன் கேப்டன் விராட் கோலி இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தொடரில் முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மறுதினம் துவங்க இருக்கும் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இளம் வீரரான சுப்மன் கில் அணியில் விளையாடுவார் என்று இந்திய அணியின் துணை கேப்டன் புஜாரா உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் நிச்சயம் சுப்மன் கில் விளையாடுவார். ஆனால் அவர் எந்த இடத்தில் விளையாடுவார் என்பதை இப்போது தெரிவிக்க முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்தே கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

gill

நிச்சயம் இந்த தொடரிலும் அவர் இந்திய அணியுடன் இருப்பார். அவரைப் பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வாறு விளையாடினாரோ அதேபோன்று இந்த தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்துவார். துர்திஷ்ட வசமாக இங்கிலாந்து தொடரை தவறவிட்ட அவர் தற்போது மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். நிச்சயம் அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் விளையாடுவார் என்று புஜாரா கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : 30 வயசுக்கு மேல ஆகிடுச்சு. சீக்கிரம் பார்முக்கு வாங்க இந்திய வீரர் குறித்து பேசிய – சல்மான் பட்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ராகுல் தொடக்க வீரராக இருப்பதனால் அவரிடம் இருந்து சுப்மன் கில்-க்கு நல்ல அறிவுரைகள் கிடைக்கும். அதுமட்டுமின்றி சுப்மன் கில் நேச்சுரல் பிளேயர் எனவே அவரால் எப்போதும் சிறப்பாக விளையாட முடியும். எந்த இடத்தில் அவர் இறங்குவார் என்பது குறித்து தற்போது எவ்வித கருத்துக்களையும் கூறமுடியாது என்று புஜாரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement