முதுகு வலியோட இந்திய அணியை காப்பாத்துனாரு.. 100வது போட்டிக்கு முன் அஸ்வின் அரிப்பணிப்பை பாராட்டிய புஜாரா

Cheteswar Pujara
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ஆம் தேதி தரம்சாலா நகரில் துவங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த பெரிய தொடரை 4 போட்டிகளின் முடிவிலேயே 3 – 1* என்ற கணக்கில் வென்றுள்ளது. இதைத் தொடர்ந்து தரம்சாலாவில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 100வது போட்டியில் விளையாடி சாதனை படைக்க உள்ளார்.

கடந்த 2011இல் அறிமுகமாகி உலகின் அனைத்து அணிகளுக்கும் சவாலை கொடுத்து வரும் அவர் இதுவரை 99 போட்டிகளில் 507* விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 500 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் உட்பட பல்வேறு சாதனைகள் படைத்த அஸ்வின் 100வது போட்டியில் விளையாடுவதை முன்னிட்டு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

- Advertisement -

புஜாரா பாராட்டு:
அந்த வரிசையில் 2021 சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்திக்க வேண்டிய இந்தியாவை தமது இடத்தில் விகாரியுடன் சேர்ந்து முதுகு வலியுடன் அஸ்வின் காப்பாற்றியதை பற்றி புஜாரா நினைவு கூர்ந்து பாராட்டியுள்ளார். இது பற்றி இஎஸ்பிஎன் இணையத்தில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “அஸ்வின் ஒரு பேட்ஸ்மேனாகவும் விளையாடக் கூடியவர் என்பதை நாம் அறிவோம்”

“2021இல் சேப்பாக்கத்தில் அவருடைய மேட்ச் வின்னிங் பேட்டிங் மற்றும் பவுலிங் போற்றப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் 2021 சிட்னி டெஸ்டில் மோசமான முதுகு வலியுடன் அவர் பேட்டிங் செய்து இந்தியாவை காப்பாற்றியது நீண்ட காலம் பேசப்படும். அந்தப் போட்டியில் 5வது நாள் தோல்வியை தவிர்க்க போராடிய இந்தியாவுக்கு அவர் தேநீர் இடைவெளிக்கு பின் அவுட்டான என்னுடைய இடத்தில் பேட்டிங் செய்தார்”

- Advertisement -

“அந்த தேநீர் இடைவேளையில் முதுகு வலியை கொண்டிருந்த அவர் தோல்வியை நினைத்து கவலைப்பட வேண்டாம் என்று என்னிடம் சொன்னது இப்போதும் நினைவிருக்கிறது. பொதுவாக உங்களுடைய முதுகு காயத்தை சந்தித்தால் பந்துகளை அடிக்காமல் விடுவது கடினமாகும். குறிப்பாக நீங்கள் சரியாக நிற்க முடியாது என்பதால் பவுன்சர் பந்துகளை சரியாக விட முடியாது. அதே போல ஸ்பின்னர்களுக்கு எதிராக பந்தை தடுப்பது கடினமாகும்”

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : கேப்டன்ஷிப் பதவியில் விலகுக்கிறாரா தல தோனி? பேஸ்புக் பதிவால் ரசிகர்கள் குழப்பம்

“ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி அவரும் தசைப் பிடிப்பால் அவதிப்பட்ட விகாரியும் பார்ட்னர்ஷிப் அமைத்து நம்மை காப்பாற்றினர்” என்று கூறினார். புஜாரா கூறும் அந்த போட்டியில் 128 பந்துகளை எதிர்கொண்டு நங்கூரமாக விளையாடிய அஸ்வின் 39* ரன்கள் அடித்து இந்தியா ட்ரா செய்வதற்கு முக்கிய பங்காற்றியதை மறக்க முடியாது. அது கடைசியில் 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா தோற்கடிக்க உதவியது குறிப்பிடத்தக்கது.

Advertisement