என்னுடைய இந்த தவறை திருத்திக்கொண்டதாலே என்னால் சிறப்பாக விளையாட முடிகிறது – ப்ரித்வி ஷா பேட்டி

Shaw-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

CSK_VS_DC

- Advertisement -

அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ப்ரித்வி ஷா 64 ரன்களை குவித்தார். அதன் பின்னர் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

சென்னை அணியில் டூபிளெஸ்ஸிஸ் தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடவில்லை. டூபிளெஸ்ஸிஸ் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி அணி சார்பாக ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டநாயகனாக ப்ரித்வி ஷா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று போட்டி முடிந்து பேட்டியளித்த ஆட்டநாயகன் ப்ரித்வி ஷா கூறுகையில் :

shaw

இந்த மைதானத்தில் பேட்டிங் செய்யும்போது துவக்கத்தில் அதன் தன்மையை புரிந்து மைதானம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்த்து ஆடினேன். மேலும் கிரவுண்ட் முழுவதும் பந்துகளை அடிக்க வேண்டும் அது ரொம்பவே முக்கியம். அந்த வகையில் கடந்த ஆண்டும் சரி இப்போதும் சரி என்னால் சிறப்பாக விளையாட முடிகிறது. இருப்பினும் நான் சிறிய சிறிய தவறுகளை செய்கிறேன்.

அந்த தவறை இம்முறை செய்யக்கூடாது என்பதால் பந்தை தூக்கி அடிக்காமல் தரையில் ஆட பழகி கொள்கிறேன். என்னுடைய பேட்டிங் ஹைலைட்ஸ் பார்த்து அதில் உள்ள தவறுகளை திருத்தி விளையாடுவதால் இப்பொழுது அனைத்தும் சரியாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த மைதானத்தில் பேட்டிங் செய்ய மிகவும் சிறப்பாக இருந்தது என்று ப்ரித்வி ஷா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement