நேற்று புனே மைதானத்தில் நடந்த சென்னைக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறியது பஞ்சாப் அணி. ஆனால் இந்த போட்டியின் போது “ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை அணி வெளியேறியது தமக்கு மிகுந்த மகழ்ச்சி” என்று பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா கூறியுள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் 14 போட்டிகள் விளையாடி 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று பிலே ஆப் நுழையாமல் வெளியேறியது. இதில் ஒரு வேலை நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி சென்னை அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தால் அந்த அணிக்கு பிலே ஆப் நுழையும் வாய்ப்பு இருந்திருக்கும்.
ஆனால் பஞ்சாப் அணியின் இந்த இக்கட்டான நிலைக்கு காரணம்,அந்த அணி மும்பையுடன் தோல்வியுற்றதால் தான். இருப்பினும் மும்பை அணி பஞ்சாப் அணிக்கு முன்னதாகவே தொடரை விட்டு வெளியேறியது.
Did #PreityZinta just say “I am just very happy that Mumbai is not going to the finals..Really happy” ???? #CSKvKXIP #MIvsDD #IPL #IPL2018 pic.twitter.com/KWaxSUZYZh
— Jo (@jogtweets) May 20, 2018
இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது பஞ்சாப் அணியின் ஒருமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா தனது அருகில் இருந்த ஒருவரிடம் ஆங்கிலத்தில் “”I’m just very happy that Mumbai is knocked out…very happy” என்று கூறியுள்ளார். அதாவது “மும்பை அணி போட்டியில் இருந்து வெளியேறியது தமக்கு மிகுந்த மகழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார். அவர் கூறியுள்ளது அவர் உதட்டசைவில் தெள்ள தெளிவாக தெரிகிறது.