சென்னை அணி தற்போது முதல் குவாலிபயர் சுற்றில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. இருப்பினும் இன்னொரு போட்டி சென்னை அணிக்கு உள்ளது. அந்த போட்டியில் வென்றால் சென்னை அணி இறுதி போட்டிக்கு நுழைய வாய்ப்புள்ளது.
இந்நிலையில் கடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும் பஞ்சாப் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா தோனியை சந்தித்து பேசிய புகைப்படம் வைரலானது. ப்ரீத்தி ஜிந்தா தோனியிடம் என்ன பேசினார் என்பது குறித்து வலைத்தளத்தில் விவாதங்கள் நடந்தன. தற்போது அந்த கேள்விக்கான விடையை ப்ரீத்தி ஜிந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் ப்ரீத்தி ஜிந்தா குறிப்பிட்டதாவது : தோனிக்கு இருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவர் இருப்பினும் தோனியை தாண்டி அவரது மகள் ஸிவா எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் அவரை கடத்த போகிறேன் என்று தோனியிடம் கூறினேன். அவர் சிரித்தபடி என்னிடம் பேசிவிட்டு சென்றார் என்று புகைப்படத்தை பதிவிட்டு ட்வீட் செய்துள்ளார். இதோ அந்த ட்வீட் :
Captain cool has many fans including me, but off-late my loyalties are shifting to his little munchkin Ziva. Here I’m telling him to be careful – I may just kidnap her ???? Now it’s time for you guys to Caption THIS photo…#Ting pic.twitter.com/bD1ADSXopc
— Preity G Zinta (@realpreityzinta) May 7, 2019
தோனிக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் போன்று அவரது மகள் செய்யும் சேட்டைகளுக்காக அவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதில் ஒருவர் ப்ரீத்தி ஜிந்தா என்பதும் குறிப்பிடத்தக்கது.